Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Health

மார்பகப் புற்றுநோய்க்கு முழுமையான நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை

May 13, 2022
in Health
0
மார்பகப் புற்றுநோய்க்கு முழுமையான நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை

கொரோனாக் காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் நலன்கள் மீது கூடுதலாக அக்கறை செலுத்தியதன் காரணமாக பெண்மணிகள் பலரும் தங்களின் ஆரோக்கியத்தின் மீது முழுமையான கவனத்தைச் செலுத்தவில்லை.

இதன் காரணமாக ஆண்டுதோறும் வழக்கமாக அவர்கள் மேற்கொள்ளும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகளை 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் மார்பக புற்று நோயை குணப்படுத்த நவீன கதிரியக்க சிகிச்சை முழுமையான பலனை வழங்கி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மார்பக புற்றுநோயை மெமோகிராம் எனும் மார்பு ஊடுகதிர் சாதனம் மூலம் துல்லியமாக அவதானிக்கப்படுகிறது.

தற்போது இத்தகைய பரிசோதனையில் முப்பரிமாண தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் பாதிப்பின் தன்மை துல்லியமாகவும், தொடக்க நிலையிலும் கண்டறியப்படுகிறது.

நோயின் நிலை மற்றும் தீவிரத்தன்மையைப் பொறுத்து சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

இப்போது மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் புற்றுநோய் செல்களை துல்லியமாக அவதானித்து கண்டறிந்து அழிப்பதற்காக ட்ருபீம் கதிரியக்க சிகிச்சை முறை அறிமுகமாகி முழுமையான நிவாரணத்தை வழங்கி வருகிறது.

ஆண்டுதோறும் உலக அளவில் ஆறு மில்லியனுக்கும் மேற்பட்ட பெண்மணிகள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக மார்பக புற்றுநோய் குறித்த முழுமையான விழிப்புணர்வை பெண்மணிகள் பெற்று, ஆண்டுதோறும் இதற்குரிய பரிசோதனைகளை முறையாகவும், தொடர்ச்சியாகவும் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

டொக்டர் பிரேம் குமார்

தொகுப்பு அனுஷா.

Previous Post

பொதுஜன பெரமுனவினர் ரணிலுக்கு ஆதரவு? மஹிந்தவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி?

Next Post

பிரதமர் அதிரடி நடவடிக்கை! | அத்தியாவசிய தேவை தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய விசேட குழு

Next Post
பிணை முறி மோசடி: ரணில் விசாரணைக்கு அழைப்பு

பிரதமர் அதிரடி நடவடிக்கை! | அத்தியாவசிய தேவை தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய விசேட குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures