Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘பொன்னியின் செல்வன்’ ரஜினிகாந்த் கொடுத்த தகவல்

July 22, 2019
in Cinema
0

மணிரத்னம் இயக்கத்தில் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ படம் தயாராகப் போவதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. நடிகை ஐஸ்வர்யா ராய் சில மாதங்களுக்கு முன்பு தான் படத்தில் நடிக்கப் போவதாக தெரிவித்திருந்தார். அதன் பிறகே படம் கண்டிப்பாகத் தயாராகும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு வந்தது.

இருப்பினும், அடுத்தடுத்து படத்தில் இவர் நடிக்கப் போகிறார், அவர் நடிக்கப் போகிறார் என பல நடிகர்கள், நடிகைகளைப் பற்றி தகவல்கள் வந்து கொண்டேயிருந்தன. அதேசமயம், படத்தை யார் தயாரிக்கப் போகிறார்கள் என்பது பற்றியும் சில குழப்பமான சூழல் இருந்தது.

இப்போது படத்தை தயாரிக்கப் போவது லைகா நிறுவனம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதை ‘காப்பான்’ திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

“எம்ஜிஆர் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் உருவாக்க நினைத்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தை சுபாஷ்கரன் தயாரிக்க உள்ளார். வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், நந்தினி, குந்தவை கேரக்டர்களை திரையில் பார்க்க ரொம்ப ஆவலாக உள்ளேன்,” எனப் பேசினார்.

ரஜினிகாந்த் பேச்சில் ‘பொன்னியின் செல்வன்’ பற்றிய தகவல் வந்ததால் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

Previous Post

ரசிகர்களுடன் அஜித் எடுத்த செல்பி

Next Post

தென்கயிலை ஆதீனம் மீதான தாக்குதல் வழக்கின்போது கவனத்தில் எடுக்கப்படும்!

Next Post

தென்கயிலை ஆதீனம் மீதான தாக்குதல் வழக்கின்போது கவனத்தில் எடுக்கப்படும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures