Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

பாட்டுக்கு நான் பாடுபட்டேன் ,அந்த பாடல் பல விதம்தான்…!

October 27, 2018
in Cinema
0

சுந்தரி கண்ணால் ஒரு சேதி.. சொல்லடி என்னாள் நல்ல தேதி…’ என, ஹார்மோனியப்பெட்டியில் விரல்களை விளையாட விட்டபடியே, மாணவர்களைப்பார்த்து, ‘நான் உனை நீங்க மாட்டேன்.. நீங்கினால் துாங்க மாட்டேன்…’

இளையராஜா முடிக்கும் போது, அரங்கமே ஆர்ப்பரித்தது. கோவையில் நடந்த தனியார் கல்லுாரி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில், இளையராஜா சமீபத்தில் பங்கேற்றார். அதில், அவரளித்த சுவாரசிய பதில்கள்…

* கீபோர்டுல கம்போசிங் செய்வதே கஷ்டம். நீங்க எப்படி, ‘நோட்ஸ்’ மூலமே மேஜிக் பண்றீங்க?

பல ஜென்மம் காத்திருந்தே, இது எனக்கு வசமானது. பயிற்சி எடுத்தால் ஒரு காலத்தில் நீங்களும் வருவீர்கள். ஆரம்பத்திலே முடியலைணு முடங்கிடாதீங்க. கம்போஸ் செய்ய, பாட்டு பாட எப்போதும் யோசிக்காதீங்க. மனசில் வருவதை பாடு; பாட்டாயிடும். ‘நான் பாடும் பாடலெல்லாம், நான் பட்ட பாடே அன்றோ, உலகில் இதை யார் உணர்வார்…!’

* நீங்க எதிர்பார்த்த அளவு வராத பாடல் எது?

எல்லாமேதான். என்னுடைய எந்த பாட்டை போட்டாலும், அதில் உள்ள தவறை சொல்லுவேன். அதை பெரிய சீரியலாகவே எடுக்க வேண்டியிருக்கும்.

* லைட் மியூசிக் பாட, கிளாசிக் இசை கத்துக்க வேண்டியது அவசியமா?

கண்டிப்பாக… பேசிக் எப்போதுமே முக்கியம். வர்ணம், கீதம், கீர்த்தனைணு புரந்தரதாசர் காலத்திலே, இசையின் நுணுக்கங்களை நம் முன்னோர்கள், கம்போஸ் பண்ணி வெச்சிருக்காங்க.

அந்த அரிய செல்வங்களை உபயோகப்படுத்தவில்லை என்றால் நாம் முட்டாள்கள். தியாகராஜ சாமி, முத்துசாமி தீட்சிதர் போன்ற முன்னோர்களின் பாடல்களை பாடி பயிற்சி எடுங்க.

அவர்கள் கம்போஸ் செய்த பாடல்களில் தவம் இருந்தது. தவத்தினால் உருகி உருகி பாடிய பாடல்களைக் கொண்டு, பயிற்சி எடுங்கள். அவர்களின் பாடலில் வரும் ‘ராமா’ என்ற ஒரு வார்த்தை போதும்; அதை பாடும் நமக்கும், அந்த புண்ணியம் வந்து சேரும்.

* ஒரு பேட்டியில், கார்த்திக் ராஜா முறையா இசை கத்துக்கிட்டார்; யுவன் அப்படியில்லைணு சொல்லியிருக்கீங்க. இப்போ யுவனின் வளர்ச்சியை எப்படி பார்க்குறீங்க?

இசைக்கு வெற்றி தோல்வி இல்லை. வாழ்க்கையில் எதையும், வெற்றி தோல்வி கணக்கில் வைத்துக்கொள்ள கூடாது. பேமஸ் ஆயிட்டா வெற்றியா? எதை வெளிப்படுத்துறாங்களோ அதை பாருங்க. அதை கண்டுபிடித்தால், அது உங்களுக்கான வெற்றி.

* இசைத்துறை இளைஞர்களுக்கு உங்கள் அட்வைஸ் என்ன?

எல்லாருக்கும் ஒரே அட்வைஸ் பொருந்தாது; புரிதல், குரல் அமைப்பு, முயற்சி வெவ்வேறாக இருக்கும். அதை உணர்ந்து, வேலை வாங்குவதுதான் என் வேலை.

உங்கள் கவனம் பல விஷயங்களால் சிதறிக்கிடக்கிறது. தேர்ந்தெடுத்த ஒரே விஷயத்தில், ‘மடை திறந்து… பாடும் நதி அலை நான்’ போல, பிடித்த பிடியாய் இருந்தால், லட்சியத்தை அடைவீர்கள்.

* இசைத்துறையில் நவீன டெக்னாலஜியின் தாக்கம் எப்படி உள்ளது?

அன்றைய ரெக்கார்டிங்கில் ‘நேச்சுரல் டெப்த்’ இருக்கும். மேக்னடிக் முறையில் டிராக்கில் டிரான்ஸ்பர் செய்து, பின்னர் பிரிண்ட் செய்வார்கள். அதிலும் நீங்கள் கேட்பது ரெக்கார்டிங்

செய்த பெர்பக்ட் இசை கிடையாது.

அப்படியிருக்க, இன்றைய டெக்னாலஜி வளர்ச்சி, இசையை இன்னும் பிரமாதப்படுத்தியிருக்க வேண்டாமா? வயலினை வாசிக்க விட்டு ரெக்கார்டு செய்ய வேண்டும். பெர்பாமன்ஸ் இருந்தால்தான் அது ஆர்ட்.

Previous Post

யோகி பாபு காதலை சேர்த்து வைக்கும் ஜோதிகா

Next Post

ஆர்.கண்ணன் இயக்கத்தில் மீண்டும் அதர்வா

Next Post

ஆர்.கண்ணன் இயக்கத்தில் மீண்டும் அதர்வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures