பள்ளிகளுக்கான தேசிய பீச் வாலிபால் போட்டியில் பெரும்பான்மையான பிரிவுகளில் வென்ற தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. நாகப்பட்டினத்தில் பள்ளிகளுக்கு இடையிலான 64வது தேசிய பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. 14, 17, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. தமிழக அணிகள் அனைத்து பிரிவுகளிலும் பைனலுக்கு முன்னேறின. மாணவர்களுக்கான யு-19 பிரிவில் டெல்லி அணியை 9-21, 21-19, 15-10 என்ற புள்ளி கணக்கில் தமிழக அணி வென்றது. கோவா 3வது இடம், குஜராத் 4வது இடம் பிடித்தன. யு-17 பிரிவில் தமிழக மாணவர் அணி 21-6, 21-11 என்ற செட்களில் ஒடிஷா அணியை வீழ்த்தியது. டெல்லி 3வது இடம், கோவா 4வது இடம் பிடித்தன. மாணவர்களுக்கான யு-14 பிரிவில் டெல்லி அணி 21-19, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ்நாடு அணியை தோற்கடித்தது. குஜராத் 3வது இடம், வித்யபாரதி 4வது இடம் பிடித்தன. மாணவிகளுக்கான யு-19 பிரிவில் தமிழகம் 21-1. 21-9 என்ற நேர் செட்களில் தெலங்கானா அணிழை வீழ்த்தியது. இப்பிரிவில் டெல்லி 3வது இடம், கோவா 4வது இடம் பிடித்தன. மாணவியர் யு-17 பிரிவில் தமிழகம் 21-5, 21-16 என கோவா அணியை வென்றது. குஜராத் 3வது இடம், டெல்லி 4வது இடம் பிடித்தன. மாணவியர் யு-14 பிரிவில் தமிழகம் 12-21, 21-14, 15-13 என்ற கணக்கில் கோவாவை வீழ்த்தியது. டெல்லி 3வது, தெலங்கானா 4வது இடம் பிடித்தன. தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

