Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பண மோசடி வழக்கில் இயக்குனர் வடிவுடையான் கைது

March 3, 2020
in Cinema
0

கரண் நடித்த தம்பி வெட்டோத்தி சுந்தரம், ஸ்ரீகாந்த் நடித்த சவுகார் பேட்டை, பரத் நடித்த பொட்டு படங்களை இயக்கியவர் வி.சி.வடிவுடையான், சன்னி லியோன் நடிப்பில் வீரமாதேவி என்ற படத்தை இயக்கினார். அது டிராப் ஆகிவிட்டது. தற்போது பண மோசடி வழக்கில் இவர் கைதாகி உள்ளார்.

சென்னை, விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் மகேஷ் கோத்தாரி, சினிமா பைனான்ஸியர் மற்றும் தயாரிப்பாளர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வி.சி.வடிவுடையான் மீது விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் “விஷாலிடம் தான் கால்ஷீட் வாங்கி வைத்திருப்பதாகவும், 7 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க இருப்பதாகவும் வடிவுடையான் என்னிடம் கூறினார். அந்த படத்தை என்னை தயாரிக்க சொன்னார்.

படத்தின் முன் தயாரிப்பு செலவுக்காக 3 தவணையாக அவரிடம் 47 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் படத்தை ஆரம்பிக்கவில்லை. விஷாலிடம் கால்ஷீட் வாங்கவும் இல்லை. திட்டமிட்டு என்னை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். எனவே அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த விருகம்பாக்கம் போலீசார், வி.சி.வடிவுடையானை பண மோசடி வழக்கில் கைது செய்தனர்.

Previous Post

துல்கர் செய்த உதவி: ஒளிப்பதிவாளர் நெகிழ்ச்சி

Next Post

இந்தியன் 2 விபத்து : விசாரணைக்கு கமல் ஆஜர்

Next Post

இந்தியன் 2 விபத்து : விசாரணைக்கு கமல் ஆஜர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures