Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நாய்க்கு பிரபாகரன் பெயர்; விளக்கமளித்து மன்னிப்பு கேட்ட துல்கர்

April 27, 2020
in Cinema
0

அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த படம் ‘வரனே அவஷ்யமுண்டு’.

இதில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோரும் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி 2 மாதங்கள் ஆகிவிட்டது.

இந்த படத்தில் மும்பையை சேர்ந்த பெண் பத்திரிகையாளரின் புகைப்படத்தை அவர் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியது தொடர்பாக துல்கர் மன்னிப்பு கேட்டார்.

சில நாட்களுக்கு முன்பு இந்தப் படம் டிஜிட்டலில் இணையத்தில் வெளியானது.

தற்போது மீண்டும் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இப்படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்ற பெயர் வைக்கப்பட்டு இருந்தது. அத்துடன் ஒரு காமெடி காட்சியும் இருக்கிறது.

இதனையடுத்து இந்த காட்சியை பார்த்த தமிழர்கள் காட்சியை நீக்க வேண்டும் எனவும் படத்தயாரிப்பாளரும் நடிகருமான துல்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதனையறிந்த நடிகர் துல்கர் ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது தரப்பு நியாயத்தை விளக்கியும் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

வரனே அவஷ்முண்டு படக்குழு மற்றும் என் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வரனே அவஷ்யமுண்டு படத்தில் வந்த பிரபாகரன் ஜோக் தமிழ் மக்களை அவமதிப்பதாக உள்ளது என்று பலர் என்னிடம் தெரிவித்தார்கள். அது வேண்டும் என்றே செய்யவில்லை.

அந்த ஜோக் பழைய மலையாள படமான பட்டன பிரவேஷம் பற்றியது, மேலும் அது கேரளாவில் பிரபலமான மீம் ஆகும். அந்த பெயர் கேரளாவிலும் பொதுவான பெயர். அதனால் உயிருடன் இருப்பவர்கள் அல்லது இறந்தவர்கள் யாரையும் குறிப்பது அல்ல.

இந்த காட்சிக்கு ரியாக்ட் செய்பவர்களில் பலர் படத்தை பார்க்காமல் பேசுகிறார்கள், வெறுப்பை பரப்ப முயற்சி செய்கிறார்கள்.

என்னையோ, இயக்குநர் அனுப்பையோ வெறுப்பதை ஏற்க முடியும். இதை நம் அளவில் வைத்துக் கொள்வோம்.
ஆனால் தந்தை அல்லது சீனியர் நடிகர்களை தொடர்புபடுத்த வேண்டாம். அன்பான தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

யாரையும் அவமதிக்க வேண்டும் என எப்பொழுதும் நினைத்தது இல்லை. இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

உங்களில் சிலர் மோசமாக பேசுவதுடன் மிரட்டவும் செய்கிறீர்கள். இது நடந்திருக்க வேண்டாம் என விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சர்ச்சையான அந்த காமெடி காட்சியின் வீடியோவை துல்கர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

தாயின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் கதறி அழுத இர்பான்கான்

Next Post

கொரோனா – மொத்த எண்ணிக்கை 588 ஆக அதிகரிப்பு

Next Post

கொரோனா – மொத்த எண்ணிக்கை 588 ஆக அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures