நாடோடிகள், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உட்பட பல படங்களில் நடித்த கே.கே.பி.கோபால கிருஷ்ணன், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் குப்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கே.கே.பி.கோபால கிருஷ்ணன். சமுத்திரகனி இயக்கத்தில், சசிகுமார் நடித்த நாடோடிகள் படத்தில் அனன்யாவின் தந்தையாக நடித்து இவர் புகழ்பெற்றார்.
தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சிங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டுப் பிள்ளை உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். கிராமத்து கதாபாத்திரங்களில் யதார்த்தமாக சிறப்பாக நடிக்க கூடியவர்.
இந்நிலையில் ஈரோட்டில் தனது வீட்டில் வசித்து வந்த இவருக்கு, இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

