கடவுளின் தேசம் என இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு கிடைக்காத பெருமை கேரளாவுக்கு மட்டுமே இருந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுமார் இரண்டு வாரமாக பெய்த மழையும், வெள்ளமும் கேரளாவையே தலைகீழாக புரட்டிப்போட்டது. நாட்டின் பலபக்கம் இருந்தும் வெள்ள நிவாரண நிதி தினந்தோறும் வந்துகொண்டு இருக்கிறது..
மலையாள திரையுலக நட்சத்திரங்கள் தங்கள் பங்களிப்பாக தனித்தனியாகவும் கூட்டாக இணைந்தும் நிதி உதவி வழங்கியுள்ளனர். இருந்தாலும் தங்களது பங்களிப்பு இன்னும் பெரிய அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடத்தி நிதி திரட்ட மலையாள நடிகர் சங்கமான அம்மா (AMMA) முடிவு செய்துள்ளதாம். இந்த கலைநிகழ்ச்சிகள் அநேகமாக அரபு நாடுகளில் நடைபெறலாம் என தெரிகிறது.
