வளர்ந்த வரும் நடிகர் அபிஷேக், தான் வசிக்கும் சர்வீஸ் அப்பார்ட்மெண்டில், நடிகர் விமல் தன் நண்பர்களுடன் குடிபோதையில் தன்னை தாக்கியதாக விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை ஏற்று விருகம்பாக்கம் போலீசார் விமல் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய தேடிவருகிறார்கள்.
விமல் அவர் வீட்டிலோ, அலுவலகத்திலோ படப்பிடிப்பிலோ இல்லை. அவர் தலைமறைவாகி விட்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. “விமல் மீது வேண்டுமென்றே பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கை சட்டப்படி சந்திப்போம். படம் சம்பந்தமாக வெளியூர் சென்றுள்ளார். அவர் வந்ததும் போலீஸ் முன் ஆஜராகி விளக்கம் அளிப்பார்” என்று விமல் தரப்பினர் கூறுகிறார்கள்.
விமல் இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமீன் மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விமலும் அவரது நண்பர்களும், நடிகர் அபிஷேக்கை தாக்கும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளிவந்துள்ளது. இது விமலுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

