Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

திருமணம் நடிகைகளுக்கு முற்றுப்புள்ளியா? – ரித்விகா வருத்தம்

January 23, 2019
in Cinema
0

‘மெட்ராஸ்’ படத்தில் நடித்ததன் மூலம் யார் இவர் என்ற கவனத்தை ஈர்த்தவர் நடிகை ரித்விகா. அதன் பின் சில படங்களில் நடித்தாலும் ‘கபாலி’ படத்தில் மட்டுமே அவருக்கென பெயர் கிடைத்தது. தற்போது சில படங்களில் நடித்து வரும் ரித்விகா ‘பிக் பாஸ் 2’ வெற்றியாளர் பட்டத்தை கைப்பற்றினார்.

அதன்பின் அவரும் அடிக்கடி செய்திகளில் இடம் பெற ஆரம்பித்தார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரித்விகா, அடுத்த வருடம் தன் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ரித்விகா திருமணம் பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்தன. திருமணத்திற்குப் பின் அவர் நடிக்க மாட்டார் என்றும் சிலர் செய்தி வெளியிட்டுள்ளது ரித்விகாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது குறித்து டுவிட்டரில், “திருமணம் குறித்த கேள்விக்கு அடுத்த வருடம் நடக்க வாய்ப்புள்ளது என்றேன். அதை சரிவர அறியாமல் பத்திரிகைகள் திருமணத்திற்கு பின் நான் நடிப்பை தொடரப்போவதில்லை என்று சேர்த்து எழுதியிருப்பது வருத்தத்தை தருகிறது. திருமணம் என்பது நடிகைகளுக்கு முற்றுப்புள்ளியா? வருத்தம்,” எனப் பதிவிட்டுள்ளார்.

Previous Post

தனது கொள்கையை மாற்றும் நயன்தாரா

Next Post

ஹன்சிகாவின் தனிப்பட்ட புகைப்படங்கள் ‘லீக்’

Next Post

ஹன்சிகாவின் தனிப்பட்ட புகைப்படங்கள் 'லீக்'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures