Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

தலைமையை மீண்டும் ஏற்றுக்கொண்டமைக்கான காரணத்தை கூறிய மெத்தியூஸ்!

January 10, 2018
in Sports
0
தலைமையை மீண்டும் ஏற்றுக்கொண்டமைக்கான காரணத்தை கூறிய மெத்தியூஸ்!

ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணிக்கு அஞ்சலோ மெத்தியூஸ் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பதவியும் நிரந்தரமா என்று கேட்டதற்கு, இனி எந்த மாற்றமும் தலைமைப் பதவியில் நேராது என தேர்வுக்குழுத் தலைவரும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத் தலைவரும் உறுதியாக தெரிவித்துவிட்ட னர்.

இலங்கை கிரிக்கெட் அணி, கடந்த ஓர் ஆண்டாகவே தொடர் சரிவைச் சந்தித்துவருகிறது.

டெஸ்ட், ஒருநாள், இருபதுக்கு என அனைத்து வகைக் கிரிக்கெட் போட்டிகளிலும் தோல்விக்கு மேல் தோல்வி. விளைவு, தொடர்ச்சியாக அணித் தலைவரை மாற்றி, புதுப்புது உத்திகளைக் கையாண்டுவந்தது இலங்கைக் கிரிக்கெட் நிர்வாகம்.

ஆனால், எந்த உத்திக்கும் பலன் கிடைத்தபாடில்லை.அதே தோல்விகளைத் தான் சந்தித்தது. இந்நிலையில், எல்லாம் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்கிறது இலங்கை கிரிக்கெட் நிறுவனம்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், சிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கை அணி, ஒருநாள் தொடரில் மண்ணைக் கௌவியவுடன், அணியின் தலைவராகவிருந்த அஞ்சலோ மெத்தியூஸ் பதவி விலகினார்.

அதன் பின்னர், உபுல் தரங்க அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இறுதியாக, திஸர பெரேரா தலைவராக்கப்பட்டார். ஆனால் இலங்கை, வெற்றியை மட்டும் எட்டியபாடில்லை.

இக்கட்டான இந்தச் சூழ்நிலையில்தான், புதிய பயிற்சியாளராக சந்திக்க ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு, அணியின் தலைவராக ஒருவர் நியமிக்கப்பட்டு, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிகள் வரை அவரே அந்தப் பதவியில் தொடர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் விட்ட இடத்திலேயே அனைத்தும் தொடங்கியுள்ளன. அதன்படி மீண்டும் அஞ்சலோ மெத்தியூஸையே அழைத்து வந்து தலைவர் பதவியில் அமர்த்தியுள்ளது இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம்.

இந்த அறிவித்தலை விடுக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த புதிய இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், மீண்டும் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு நான் அன்று பதவியை துறக்கவில்லை.

இளம் வீரர் ஒருவருக்கு அணியைக் கட்டியெழுப்புவதற்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு விலகுவதுதான் சரியென்று அன்று நான் நினைத்தேன்.

ஆனால் பயிற்சியாளரும், இலங்கைக் கிரிக்கெட் நிர்வாகமும் கேட்டுக்கொண்டதற்கிணங்க மீண்டும் தலைவர் பொறுப்பை இப்போது ஏற்றுள்ளேன்.

நான் கடந்த பத்து வருடங்களாக விளையாடுகின்றேன். இந்த கிரிக்கெட் எனக்கு நிறைய தந்திருக்கிறது.

இக்கட்டான இந்த நிலையில் நான் இலங்கை கிரிக்கெட்டுக்கு சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை உதறித் தள்ளினால் துரோகம் செய்தவனாகிவிடுவேன். அதனால்தான் தலைவர் பொறுப்பை மீண்டும் ஏற்றேன் என்றார்.

அஞ்சலோ மெத்தியூஸாவது நீண்டகாலத் தலைவராக நீடிப்பாரா என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, தேர்வுக்குழுத் தலைவர் கிரஹம் லெப்ரோய், இனி எந்தவித தலைவர் மாற்றமும் நிகழாது. அது நிச்சயம் என்றார்.

Previous Post

5 ரன்களில் விராட் கோலி அவுட்டானதால் 63 வயது ரசிகர் தற்கொலை!

Next Post

பிராட்மேன் சாதனையை முறியடித்த 18 வயது ஆஃப்கானிஸ்தான் வீரர்!

Next Post
இந்த ஆர்.சி.பி மட்டும் ஏன் திருந்துவதேயில்லை…!

பிராட்மேன் சாதனையை முறியடித்த 18 வயது ஆஃப்கானிஸ்தான் வீரர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures