Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஜான்சி ராணியை எதிர்த்தால் அழித்து விடுவேன்: கங்கனா எச்சரிக்கை

January 22, 2019
in Cinema
0

தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரணவத். அவர் தற்போது நடித்து முடித்துள்ள படம் மணிகர்னிகா. இதன் வசன பகுதிகளை கங்கனாவே இயக்கி உள்ளார். இது ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ஜான்சி ராணியின் கதை. தமிழிலும் வெளிவருகிறது. வருகிற 26ந் தேதி குடியரசு தினத்தன்று படம் வெளிவருகிறது. இந்த நிலையில் வட மாநிலத்தில் பரவலாக உள்ள கர்னி சேனா என்ற அமைப்பு படத் தயாரிப்பாளருக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

அந்த அமைப்பு தயாரிப்பாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில் “மணிகர்னிகாக படத்தில் ஜான்சி ராணி ஆங்கிலேயர் ஒருவரை காதலிப்பது போலவும், ஆங்கிலேயர் முன் நடனம் ஆடுவது போலவும் காட்சிகள் இருப்பதாக கேள்விப்படுகிறோம். எங்களுக்கு படத்தை போட்டுக்காட்டி நாங்கள் சொன்ன பிறகே படத்தை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் படத்தை திரையிட விடமாட்டோம்” என்று எழுதியிருந்தார்கள்.

இதற்கு பதில் அளித்து கங்கனா கூறியிருப்பதாவது: மணிகர்னிகா படத்தை தணிக்கை குழு பார்த்து சான்று அளித்துள்ளது. வரலாற்று ஆய்வாளர்களிடம் காட்டி ஒப்புதல் பெற்றுள்ளோம். இத்தனைக்கும் பிறகு படத்தை தடை செய்வோம் என்று மிரட்டல் விடுத்தால் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். நானும் ராஜ்புத் இனத்தைச் சேர்ந்தவள்தான். தேவையில்லாமல் மிரட்டல் விடுத்தால் மிரட்டும் ஒவ்வொருவரையும் அழித்து விடுவேன். இவ்வாறு கூறியுள்ளார்.

கங்கனாவின் இந்த துணிச்சல் கருத்து பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் பிரபலங்கள் கங்கனாவுக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ரசிகர்களும் கங்கனாவுக்கு ஆதரவாக எழுதி வருகிறார்கள்.

Previous Post

சூப்பர் ஹிட்டான தமன்னாவின் ‘கெட்ட’ ஆட்டம்

Next Post

தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் பர்ஹின். தமிழில் பிந்தியா என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமாகி, கமல்ஹாசன் ஜோடியாக கலைஞன் படத்தில் நடித்தார். அதன்பிறகு பாலிவுட்டுக்கு சென்ற அவர், அங்கு ஜான் தேரே நாம் என்ற படத்தின் மூலம் புகழ்பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் அங்கேயே செட்டிலாகிவிட்டார். முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் பர்ஹின் டில்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர், நேற்று தனது காரில் டில்லி செலக்ட் சிட்டி மாலுக்கு ஷாப்பிங் செய்ய சென்று கொண்டிருந்தார். கார் சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது பின்னால் பைக்கில் வந்த சில வாலிபர்கள். அவரிடம் நீங்கள் காரை சரியாக ஓட்டவில்லை என்று தகராறு செய்துள்ளனர். அப்போது திடீரென அவர்கள் பர்ஹின் அணிந்திருந்த சங்கிலி, கை பையை பறித்துக் கொண்டு ஓடினார். பர்ஹின் காரை விட்டு இறங்கி அவர்களை துரத்தி உள்ளார். அவரை அந்த கொள்ளையர்கள் நடுரோட்டில் அடித்து தள்ளி விட்டு ஓடிவிட்டனர். இதனால் பர்ஹின் ரோட்டிலேயே மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். தனியாக செல்லும் பணக்கார பெண்களை தாக்கி கொள்ளை அடிக்கும் தக் தக் என்ற கும்பல்தான் இதனை செய்துள்ளது என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Post

தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் பர்ஹின். தமிழில் பிந்தியா என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமாகி, கமல்ஹாசன் ஜோடியாக கலைஞன் படத்தில் நடித்தார். அதன்பிறகு பாலிவுட்டுக்கு சென்ற அவர், அங்கு ஜான் தேரே நாம் என்ற படத்தின் மூலம் புகழ்பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் அங்கேயே செட்டிலாகிவிட்டார். முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் பர்ஹின் டில்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர், நேற்று தனது காரில் டில்லி செலக்ட் சிட்டி மாலுக்கு ஷாப்பிங் செய்ய சென்று கொண்டிருந்தார். கார் சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது பின்னால் பைக்கில் வந்த சில வாலிபர்கள். அவரிடம் நீங்கள் காரை சரியாக ஓட்டவில்லை என்று தகராறு செய்துள்ளனர். அப்போது திடீரென அவர்கள் பர்ஹின் அணிந்திருந்த சங்கிலி, கை பையை பறித்துக் கொண்டு ஓடினார். பர்ஹின் காரை விட்டு இறங்கி அவர்களை துரத்தி உள்ளார். அவரை அந்த கொள்ளையர்கள் நடுரோட்டில் அடித்து தள்ளி விட்டு ஓடிவிட்டனர். இதனால் பர்ஹின் ரோட்டிலேயே மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். தனியாக செல்லும் பணக்கார பெண்களை தாக்கி கொள்ளை அடிக்கும் தக் தக் என்ற கும்பல்தான் இதனை செய்துள்ளது என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures