வீர் படத்தில், சல்மான் கான் ஜோடியாக ஆரவாரமாக அறிமுகமானவர், ஜரீன் கான். அதற்குபின், ஹவுஸ்புல், ரெடி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், தற்போது அளித்துள்ள பேட்டி, பாலிவுட்டில், பெரும் பரபரப்பு தீயை பற்ற வைத்துள்ளது.
‘நான் சினிமாவுக்கு வந்த புதிதில், சில இயக்குனர்கள், என்னிடம் தவறாக நடந்து கொண்டனர். படத்தின் கதையை கூறும்போது, முத்தக் காட்சி இருப்பதாக கூறி, அதை நடித்துக் காட்டும்படி வற்புறுத்தினர். ஆனால், அவர்களது நோக்கத்தை அறிந்த நான், அதற்கு மறுத்து விட்டேன்’ என, அவர் தெரிவித்து உள்ளார்.
இந்த பேட்டியை அடுத்து, ஜரீன் கானிடம் தவறாக நடந்த இயக்குனர்கள் யாராக இருக்கும் என, பாலிவுட்டில் பட்டிமன்றமே நடந்து வருகிறது.

