Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

சிவாஜி சிலைக்கு அடியில் கருணாநிதி பெயரைப் புதைத்துவிட்டார்களே…!

October 2, 2017
in Cinema
0
சிவாஜி சிலைக்கு அடியில் கருணாநிதி பெயரைப் புதைத்துவிட்டார்களே…!

சிவாஜி கணேசனின் பெயரோடு கருணாநிதியின் பெயர் கலந்திருக்கிறது என்பது கலை உண்மை. சிவாஜி கணேசன் சிலையை கருணாநிதிதான் நிறுவினார் என்பது வரலாற்று உண்மை. இந்த இரண்டு உண்மைகளும் ஒரு சிலைக்கு அடியில் புதைக்கப்படுவதை தமிழ் உணர்வாளர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சிவாஜி கணேசன் பீடத்தில் இடம்பெற்றிருந்த கருணாநிதியின் பெயர் மீண்டும் பொறிக்கப்படவேண்டும்.
ஏன் எங்கள் மனதை நோகடிக்கிறீர்கள்? சூரியன் மீது ஏன் தாரடிக்கிறீர்கள்? சிலைதான் ஒரு மனிதனின் புகழுக்கு எல்லை என்பது இல்லை. சிலையும் ஒரு மூடநம்பிக்கை. இஸ்லாத்தில் சிலை வணக்கம் கிடையாது. அதனால் நபிகள் நாயகத்தின் பெருமையை யாரும் குறைத்துவிட முடியாது. சிலையே இல்லாவிட்டாலும் சிவாஜி கணேசன் சிவாஜி கணேசன்தான். ஆனால் நிறுவப்பட்ட சிலையில் நேர்மை இருக்கவேண்டும். தமிழ்நாட்டில்தான் சிலையே ஓர் அரசியல் ஆகிவிடுகிறது. சிலை அரசியலை ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும். கன்னியாகுமரியில் கருணாநிதி ஆட்சியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு அரசியல் பூச்சுப்பூசி அதற்கு ரசாயன பூச்சு பூசாமல் சிதையவிட்ட கதைகளையும் நாடறியும். சிலையை சிலையாக பார்க்கவேண்டும்; அரசியலாக பார்க்கக்கூடாது.

சிவாஜி கணேசன் சிலையை கடற்கரை காமராஜர் சாலையில் கருணாநிதி நிறுவியபோது அந்த சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசியவர்களில் நானும் ஒருவன். அவர்பட்ட பாடுகள் அனைத்தையும் அருகிலிருந்து அறிந்திருக்கிறேன். சிலை மறுநிலை நாட்டம் செய்யப்பட்டாலும் அந்த சிலையோடு கருணாநிதியின் பெயரும் இடம் பெற்றிருக்கவேண்டும். ஏனென்றால் இடம்தான் மாறியிருக்கிறதே தவிர சிலை மாறவில்லை. கருணாநிதியின் பெயர் எப்படி விடுபட்டது? இதுதான் இடப்பெயர்ச்சியின் பலனா? கருணாநிதியின் திருப்பெயரை தமிழக அரசு அந்த பீடத்தில் கட்டாயம் இடம்பெற செய்யவேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு இரண்டு பேரின் ரசிகனாக தமிழக அரசுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இது. இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Previous Post

தன்ஷிகாவுக்கு ஓவியா அறிவுரை

Next Post

பிக் பாஸ் பரிசுப் பணம்: ஆரவ், சொன்னீங்களே செய்வீங்களா?

Next Post
பிக் பாஸ் பரிசுப் பணம்: ஆரவ், சொன்னீங்களே செய்வீங்களா?

பிக் பாஸ் பரிசுப் பணம்: ஆரவ், சொன்னீங்களே செய்வீங்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures