Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

கால் இறுதியோடு வெளியேறியதால் சோகத்தில் மூழ்கியது ரஷ்யா

July 9, 2018
in Sports
0
கால் இறுதியோடு வெளியேறியதால் சோகத்தில் மூழ்கியது ரஷ்யா

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து ரஷ்யா வெளியேறியதால் அந்நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ரஷ்யா மற்றும் குரோஷியா அணிகள் மோதின. சோச்சியில் நடந்த இந்த போட்டியில் மக்களின் ஆதரவுடன் 31வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது ரஷ்ய அணி.

உடனே குரோஷியாவின் ஆண்ட்ரேஜ் கிராமாரிக் பதில் கோல் அடித்து சமன் செய்தார். பலம் வாய்ந்த இரு அணிகள் என்பதால் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 101வது நிமிடத்தில் குரோஷியா அணி கோல் அடித்தது. பதிலுக்கு 115வது நிமிடத்தில் ரஷ்யா கோல் அடித்து போட்டியை சமன் செய்தது.

இரு அணிகளும் சமனில் இருந்ததால் பெனால்டி ஷூட்-அவுட் முறை வழங்கப்பட்டது. அதில் குரோஷிய அணி கோல் அடித்து ரஷ்யாவை வீழ்த்தியது.

இந்தாண்டு போட்டியை நடத்தும் ரஷ்ய அணி தொடர்ந்து வெற்றியை சந்தித்து வர உற்சாகத்தில் இருந்த ரசிகர்கள் நேற்றைய தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதனர். அணி வெற்றி பெற பல்வேறு இடங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடந்து வந்தது.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரஷ்யா அணி பெனால்டி ஷூட்-ரவுண்டில் தோல்வி அடைந்ததால் அந்த நாடே அதிர்ச்சி அடைந்தது.

Previous Post

இளம் இந்தியா ‘டிரா’

Next Post

சர்ச்சைக்குள்ளான ஸ்பெயின் பயிற்சியாளர்

Next Post
சர்ச்சைக்குள்ளான ஸ்பெயின் பயிற்சியாளர்

சர்ச்சைக்குள்ளான ஸ்பெயின் பயிற்சியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures