Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘கஜினிகாந்த்’ – காப்பாற்றினாரா? கைவிட்டாரா?

August 9, 2018
in Cinema
0
‘கஜினிகாந்த்’ – காப்பாற்றினாரா? கைவிட்டாரா?

இயக்குனர் சன்தோஷ் பி ஜெயகுமார் அவருடைய முதல் படமான ‘ஹரஹர மஹாதேவகி’ படம் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்டார். அடுத்து இயக்கிய ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் மூலமும் அதைவிட அதிகம் பேசப்பட்டார்.

அவர் இயக்கிய முதல் இரண்டு படங்களும் ‘ஏ’ சர்டிபிகேட் வாங்கிய ஆபாசம் அதிகமாக இருந்த படங்கள். அதனால், அவரை ஆபாசப்பட இயக்குனர் என்று கூட அழைக்க ஆரம்பித்தார்கள். அந்தப் பெயரிலிருந்து விடுபட்டு குடும்பப் பாங்கான ஒரு படத்தை இயக்கி நல்ல பெயரை வாங்க வேண்டும் என்று அவர் இயக்கிய படம்தான் ‘கஜினிகாந்த்’.

ஆர்யா, சாயிஷா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்திற்கு நல்லவிதமான விமர்சனங்கள் வந்தும், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்று பலரும் சொன்ன பிறகும் தியேட்டர்களுக்கு எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என்கிறார்கள். கடந்த திங்கள் கிழமையே படத்தின் வசூலும் குறைந்துவிட்டதாம். இன்றைய முன் பதிவுகளைப் பார்த்தால் ஒரு வரிசை மட்டும்தான் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் ரசிக்கும்படமான இயக்குனர் எடுத்திருந்தாலும் ஏன் கூட்டம் வரவில்லை என்று விசாரித்ததற்கு இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள். ஒன்று, ஆர்யா நடித்து கடந்த சில வருடங்களில் வெளிவந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை.

இரண்டாவது, இயக்குனர் சன்தோஷ் பி ஜெயகுமார் படம் எடுத்தால் இப்படித்தான் இருக்கும் என அவருடைய முதல் இரண்டு படங்கள் நிரூபித்துள்ளன. ஒருவேளை இந்தப் படமும் அப்படி இருக்குமோ என பலர் வரவில்லை, அப்படி இல்லாத படத்தைப் பார்த்து என்ன செய்வது என அந்தப் படங்களைப் பார்த்து ரசித்தவர்களும் வரவில்லை என்கிறார்கள்.

இந்த ‘கஜினிகாந்த்’ ஓடவில்லை என்றால் மீண்டும் என்னை ‘அந்த’ மாதிரியான படங்களை எடுக்க வைத்துவிடாதீர்கள் என்று இயக்குனர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் அவருடைய அடுத்த படம் எப்படியிருக்குமோ…?.

Previous Post

கருணாநிதிக்கு த்ரிஷா மலர் தூவி அஞ்சலி

Next Post

பணிப்பகிஷ்கரிப்புகளால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே: ஜனாதிபதி

Next Post

பணிப்பகிஷ்கரிப்புகளால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே: ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures