Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய 9 சம்பவங்களின் விசாரணைகள் நிறைவு

June 21, 2021
in Sri Lanka News
0
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய 9 சம்பவங்களின் விசாரணைகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய 17 சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இவற்றுள் 9 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து, அவற்றுடன் தொடர்புடைய 32 நபர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

ஏப்ரல் 21 தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில், 17 சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் , பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவற்றுள் 9 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து அவற்றுடன் தொடர்புடைய 32 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கேகாலை , கண்டி ,குருணாகலை ,புத்தளம் மற்றும் கொழும்பு ஆகிய நீதவான் நீதிமன்றங்களிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எஞ்சிய 8 சம்பவங்கள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்காக , சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் , குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் , பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் போது புதிதாக கிடைக்கப்பெறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டும் , குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் , பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

சூர்யாவின் 40ஆவது திரைப்படம் பற்றிய புதிய தகவல்!

Next Post

கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறுவர்களிடையே புதிய நோய் அறிகுறி!

Next Post
கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறுவர்களிடையே புதிய நோய் அறிகுறி!

கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறுவர்களிடையே புதிய நோய் அறிகுறி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures