ஸ்ரேயா நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள படம் நரகாசூரன். இதன் அனுபவம் குறித்து அவர், நமக்கு அளித்த சிறப்பு பேட்டி : நரகாசூரன் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். அரவிந்த்சாமி, நான், சந்தீப், ஆத்மிகா, இந்திரஜித் எல்லோரும் ஓர் இடத்தில் சந்திக்கும் விஷயங்கள் தான் படம்.
இது இயக்குநர் படம், அழகாக கதை அமைத்து எடுத்துள்ளார். படம் முழுக்க ஊட்டியில் எடுக்கப்பட்டது. முதல் 10 நிமிடங்களிலேயே என்ன மாதிரியான கதை என புரிந்து விடும். படத்தில் ஒரு பாடல் கூட கிடையாது. அப்படியொரு கதை. சில தினங்களுக்கு முன் படம் பார்த்தேன். ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். எனக்கும் மிகவும் பிடித்த படமாக அமைந்துள்ளது.
முதன்முறையாக அரவிந்த்சாமி ஜோடியாக நடித்திருக்கிறேன். அவருடன் நடித்த முதல் காட்சி மறக்க முடியாதது. திறமையான நடிகர். சினிமா பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். எப்போதும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். யோகா, தியானம் செய்கிறேன், நிறைய ஊர்களுக்கு பயணம் செய்ய விரும்புகிறேன், ரசிக்கிறேன். இவையே நான் இளமையாக இருக்க காரணம். சென்னையில் விரும்பி சாப்பிடுவேன். ஆனால் சாப்பிங் செய்ய பிடிக்காது.
காஞ்சி பட்டு புடவைகள் மட்டும் நிறைய வாங்குவேன். முகம் தெரியாதவர்களின் உழைப்பிற்கு மரியாதை செய்யும் விதமாக புடவை வாங்குகிறேன். என் திருமண வாழ்க்கை தனிப்பட்ட விஷயம், அதை பொது வெளியில் பேச விரும்பவில்லை.முகப்பு » சினிமா » தினமலர்
இறக்கும் வரை சினிமா : ஸ்ரேயா ஆசை
தினமலர் தினமலர் 2 hrs ago
இறக்கும் வரை சினிமா : ஸ்ரேயா ஆசை
ஸ்ரேயா நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள படம் நரகாசூரன். இதன் அனுபவம் குறித்து அவர், நமக்கு அளித்த சிறப்பு பேட்டி : நரகாசூரன் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். அரவிந்த்சாமி, நான், சந்தீப், ஆத்மிகா, இந்திரஜித் எல்லோரும் ஓர் இடத்தில் சந்திக்கும் விஷயங்கள் தான் படம்.
இது இயக்குநர் படம், அழகாக கதை அமைத்து எடுத்துள்ளார். படம் முழுக்க ஊட்டியில் எடுக்கப்பட்டது. முதல் 10 நிமிடங்களிலேயே என்ன மாதிரியான கதை என புரிந்து விடும். படத்தில் ஒரு பாடல் கூட கிடையாது. அப்படியொரு கதை. சில தினங்களுக்கு முன் படம் பார்த்தேன். ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். எனக்கும் மிகவும் பிடித்த படமாக அமைந்துள்ளது.
முதன்முறையாக அரவிந்த்சாமி ஜோடியாக நடித்திருக்கிறேன். அவருடன் நடித்த முதல் காட்சி மறக்க முடியாதது. திறமையான நடிகர். சினிமா பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். எப்போதும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். யோகா, தியானம் செய்கிறேன், நிறைய ஊர்களுக்கு பயணம் செய்ய விரும்புகிறேன், ரசிக்கிறேன். இவையே நான் இளமையாக இருக்க காரணம். சென்னையில் விரும்பி சாப்பிடுவேன். ஆனால் சாப்பிங் செய்ய பிடிக்காது.
காஞ்சி பட்டு புடவைகள் மட்டும் நிறைய வாங்குவேன். முகம் தெரியாதவர்களின் உழைப்பிற்கு மரியாதை செய்யும் விதமாக புடவை வாங்குகிறேன். என் திருமண வாழ்க்கை தனிப்பட்ட விஷயம், அதை பொது வெளியில் பேச விரும்பவில்லை.
நான் இறக்கும் வரை சினிமாவில் நடிக்க வேண்டும். இது தான் என் கனவு. டான்ஸ் தொடர்புடைய ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன். என்னால் தமிழை நன்றாக புரிந்து கொள்ள முடியும், சரளமாக பேச முடியாது. விரைவில் நான் நடித்த தெலுங்கு படம் ஒன்று வெளியாக இருக்கிறது. தற்போது ஹிந்தியில் ஒரு படம் நடித்து வருகிறேன். நல்ல தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

