Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

ஆனந்தபுரம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு கொரோனா இல்லை

June 13, 2021
in Sri Lanka News
0
ஆனந்தபுரம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு கொரோனா இல்லை

புதுக்குடியிருப்பு காவற்துறை பிரிவிற்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் இருந்து 09.06.21 அன்று இரவு நந்திக்கடலுக்கு தொழிலுக்கு சென்றவரை காணவில்லை என உறவினர்கள் தேடியுள்ள நிலையில் 10.06.21 அன்று மாலை பச்சைப்புல்மோட்டை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இவரது உயிரிழப்பு குறித்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மரணவிசாரணை அதிகாரிகள்,தடையவியல் காவற்துறையினர் ஆகியோர் சடலத்தினை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளதுடன் இவரின் உயிரிழப்பு தொடர்பில் மன்றிற்கு அறிக்கையிடுமாறு பணித்துள்ளார்.

குறித்த நபர் நந்திக்கடலுக்கு செல்லும் வீதியினை விட்டு பற்றை ஒன்றிற்கு அருகிலேயே சடலமாக காணப்பட்டுள்ளார் இவரது உயிரிழப்பு தொடர்பில் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளது அங்கு உயிரிழந்தவருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் மரணவிசாரணை அதிகாரியின் அறிக்கையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார்.

இதற்கமைய குறித்த நபரின் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு சோதனை செய்யப்பட்டதன் அடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பெறுபேறு கிடைக்கப்பெற்றுள்ளது இந்நிலையில் இன்று பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கசிப்பு உற்பபத்தி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது

Next Post

மட்டக்களப்பில் ஒரு கொரோனா மரணம் நேற்றும் 80 பேருக்கு கொரோனா தொற்று

Next Post
மட்டக்களப்பில் ஒரு கொரோனா மரணம் நேற்றும்  80 பேருக்கு கொரோனா தொற்று

மட்டக்களப்பில் ஒரு கொரோனா மரணம் நேற்றும் 80 பேருக்கு கொரோனா தொற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures