நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா, தொடர்ந்து மஜிலி, ஓபேபி சக்க குன்னவே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தா அளித்துள்ள ஒரு பேட்டியில் தாய்மை பற்றி கூறியிருப்பதாவது :
எனக்கு குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பாக நடிப்புக்கு இடைவெளி கொடுத்து விடுவேன். அப்போது, என் குழந்தை தான் எனக்கு உலகமாக இருக்கும். நான் குழந்தை பருவத்தில் சில பிரச்னைகளை சந்தித்தேன். ஆனால் என் குழந்தையை அதுபோன்ற பிரச்னைகளுக்கு ஆளாக்காமல் கூடவே இருந்து நன்றாக கவனித்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.