சீனு ராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்து முடித்துள்ள உதயநிதி ஸ்டாலின், இந்தப் படத்தைத் தொடர்ந்து அட்லீ உதவியாளர் ஈனாக் இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது.
‘மேயாத மான்’ படத்தில் நடித்த பிரியா பவானி சங்கர், இந்துஜா இருவரும் கதாநாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கும் நாளன்று படம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தான், மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் உதயநிதி ஸ்டாலின். இந்தப்படத்தில் தான் தற்போது உதயநிதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அதிதி ராவ், தற்போது ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மிஷ்கின் இயக்கும் இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் இயக்குநர் ராம். ஷாந்தனுவை வைத்து மிஷ்கின் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார். அந்தப் படத்தில் தான் தற்போது உதயநிதி நடிக்கிறார்.
