பிகில் படத்தை அடுத்து இயக்குநர் அட்லி ஹிந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் டுவென்டி-20 கிரிக்கெட் நடந்தபோது சென்னை வந்த ஷாரூக்கானை, கிரிக்கெட் மைதானத்தில் அட்லி சந்தித்து பேசினார். பின்னர் அவர் தங்கியிருந்த ஓட்டலிலும் சந்தித்து பேசினார். அப்போதே இவர்கள் இணைந்து படம் பண்ண இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இவர்கள் கூட்டணி அமைப்பது உறுதியாகி இருக்கிறது. அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என தெரிகிறது. தமிழ், இந்தி மொழிகளில் தயாராக உள்ள இப்படத்திற்கு, ‘சங்கி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

