Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அடுத்தடுத்து பிஸியாகும் நாகேஷ் பேரன்

August 26, 2018
in Cinema
0
அடுத்தடுத்து பிஸியாகும் நாகேஷ் பேரன்

நகைச்சுவை நடிப்பில் மிகப்பெரிய சகாப்தமாக விளங்கியவர் நாகேஷ். அவருடைய மகன் ஆனந்தபாபு எண்பதுகளில் பாடும் வானம்பாடி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தார். அதன் பிறகு பட உலகைவிட்டே காணாமல்போனவர், சில வருடங்களுக்கு முன் இயக்குநர் சரணிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

பின்னர் சமீபத்தில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகி ரைசாவின் அப்பாவாக நடித்தார். இதற்கிடையில் ஆனந்த்பாபுவின் மகனான பிஜேஷ் நாகேஷ் தன்னுடைய தாத்தாவைப் போலவே காமெடியனாக நடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். சந்தானம் நடித்து இன்னும் வெளிவராமல் கிடக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் சமையல் கலைஞராக நடித்துள்ள பிஜேஷ், பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தில் போலீஸாகவும் நடித்து வருகிறார். ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ என்ற படத்தில் விஞ்ஞானியாக நடிக்கிறார்.

பிஜேஷ் – நாகேஷின் முதல் பேரன். எனவே அவரது பெயரில், தனது பெயரும் சேர்ந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பிஜேஷ் – நாகேஷ் என்று பெயர் சூட்டினாராம். தாத்தாவின் பெயரை தன்னுடைய பெயருடன் வைத்திருப்பதால் அவரது பேரைக் காப்பாற்ற வேண்டும் என்பதே என்னுடைய கவலை என்கிறார் பிஜேஷ்.

Previous Post

கோகோ இயக்குனரை புகழ்ந்து தள்ளிய மஞ்சிமா மோகன்

Next Post

வட சென்னை ரிலீஸ் தள்ளி வைப்பு ஏன்?

Next Post
வட சென்னை ரிலீஸ் தள்ளி வைப்பு ஏன்?

வட சென்னை ரிலீஸ் தள்ளி வைப்பு ஏன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures