Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

ஹெராத் 400 விக்கெட் சாதனையும், சங்கக்காராவினால் மீண்ட கதையும்!

October 4, 2017
in Sports
0
ஹெராத் 400 விக்கெட் சாதனையும், சங்கக்காராவினால் மீண்ட கதையும்!

அபுதாபியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை குறைந்த வெற்றி இலக்கையும் எடுக்க விடாமல் நசுக்கிய இலங்கை இடது கை வீச்சாளர் ரங்கனா ஹெராத், உலகிலேயே முதன் முதலாக 400 விக்கெட் மைல்கல்லை எட்டிய இடது கை சுழற்பந்து வீச்சாளரானார்.

மேலும் அபுதாபியில் பாகிஸ்தானை வீழ்த்திய முதல் அணி இலங்கை என்ற பெருமையையும் சேர்த்தார் 11 விக்கெட்டுகளைச் சாய்த்த ரங்கனா ஹெராத்.

இலங்கை அணி முரளிதரன் ஓய்வுக்குப் பிறகே பெற்ற வெற்றிகளில் ஹெராத் பெருமளவு பங்களிப்பு செய்துள்ளார், ஆனால் இவரது டெஸ்ட் வாழ்க்கை கேள்விக்குறியான சமயத்தில் இவருக்கு உதவி புரிந்தவர் சங்கக்காரா என்பது சிலருக்கே தெரிந்த உண்மை.

ஜூலை 2009-ல் சங்கக்காரா தனது முதல் டெஸ்ட் கேப்டன்சியைக் கையாண்ட போது, முரளிதரனுக்கு முழங்கால் காயமேற்பட்டு ஆட முடியாமல் போனது. புதிர் ஸ்பின்னர் அஜந்தா மெண்டிஸ் அணியில் இருந்தார். அப்பொது முரளிதரன் இடத்துக்கு சுரஜ் ரந்திவ் என்ற ஆஃப் ஸ்பின்னருக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சுரஜ் ரந்திவ் தான் சேவாக் சதமடிக்க முடியாமல் அழுகுணி நோ-பால் வீசியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அப்போதைய கேப்டன் சங்கக்காரா தேர்வுக்குழுவைச் சந்தித்தப் போது ரங்கனா ஹெராத் அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வாதாடினார். அத்தருணத்தில் இலங்கை கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் கூட ஹெராத் இல்லை.

இது குறித்து சங்கக்காரா கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “முரளிதரன் இல்லாத போது ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடி ரங்கனா ஹெராத் 7 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எடுத்தது என் நினைவில் இருந்தது. அதன் பிறகு 4 ஆண்டுகள் மனிதர் எங்கு போனார் என்று தெரியவில்லை. ரங்கனாவுக்கு என்னதான் நடந்தது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன், இந்நிலையில் முரளிதரனிடம் பேசி அவரை மீண்டும் அழைக்க முடிவு செய்தேன்.

அஜந்தா இருந்தார், அவர் புதிர் பவுலர். 1999-ம் ஆண்டு ஆஸ்திரேலியர்கள் இங்கு ரங்கனா ஹெராத் பந்து வீச்சை தடவு தடவென்று தடவினர். வலது, இடது கை வீரர் என்றெல்லாம் ஹெராத்துக்கு எதுவும் இல்லை, பேட்ஸ்மென்களின் யோசனையைக் கடந்து சென்று வெல்பவர். அண்ட 15 மட்டத்திலிருந்து நாங்கள் எங்கள் பள்ளிகளுக்காக ஆடும் போதிலிருந்தே எனக்கு ஹெராத்தைத் தெரியும். அவர் எதற்கும் பயப்படக்கூடியவர் அல்ல.

தேர்வுக்குழுவுக்கும் நான் நன்றி கூற வேண்டும், அவர் இலங்கை கிரிக்கெட் அமைப்பில் எதிலும் இல்லை, ஆனால் அசந்தா டிமெலிடம் நான் ஹெராத் வேண்டுமென்றேன், அவர் உடனே ஒத்துழைத்தார். அழைத்தவுடனேயே டெஸ்ட் தொடருக்குத் தயாராக இருந்தார் ஹெராத், இதுதான் அவரது சிறப்பு.” என்றார் சங்கக்காரா.

அன்று இந்தத் தேர்வுக்காக இலங்கை கிரிக்கெட்டை பின்னோக்கி இழுத்து விட்டார் சங்கக்காரா என்று பலரும் விமர்சித்த நிலையில் திரும்பி வந்த பிறகு 70 டெஸ்ட் போட்டிகளில் 364 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் தான் இந்தக் கால அளவில் இப்படியொரு சாதனையை நிகழ்த்தியுள்ள மற்றொரு வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

வங்கதேச அணியின் 3-வது மிகப்பெரிய தோல்வி: சில புள்ளி விவரங்கள்

Next Post

ரங்கன ஹெரத்தின் சாதனைக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!

Next Post
ரங்கன ஹெரத்தின் சாதனைக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!

ரங்கன ஹெரத்தின் சாதனைக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026

Recent News

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures