ஜி-7 மாநாட்டில் மைத்திரியுடன் நெருக்கமாக நடந்து கொண்ட கனடியப் பிரதமர்! அப்படி என்ன சொல்லியிருப்பார்?

ஜி-7 மாநாட்டில் மைத்திரியுடன் நெருக்கமாக நடந்து கொண்ட கனடியப் பிரதமர்! அப்படி என்ன சொல்லியிருப்பார்?

ll ll1

அண்மையில் ஜப்பானில் இடம்பெற்ற ஜி-7 நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ இலங்கை ஜனாதிபதி இருந்த இடத்திற்குச் தேடிச் சென்று கைலாகு கொடுத்துக் கதைத்திருந்தர்.

கனடாவிலிருந்து இலங்கைக்கு ஒரு உயர் மட்டக் குழுச் செல்லவுள்ள நிலையில் கனடியப் பிரதமரின் நட்புநிலையுறவு இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றைக் காண்பதற்கான நிர்ப்பந்தமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

புலம்பெயர்ந்த நாடுகளிலே தமிழ்ர்கள் அதிகமாக வாழும் கனடாவின் பங்கு இரு இனங்களும் இணைந்து வாழுதல் விவகாரத்தில் அதிகமாக இருக்கும். அங்கு இடம்பெற்ற யுத்தக்குற்றங்களிற்கான விசாரணை நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்க்கள் அதிகமாக உள்ள நேரத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றது.

இதேவேளை லிபரல்கட்சி அரசு தேர்தல் நேரத்தில் தந்த வாக்குறுதிகளை நிளைவெற்ற அதற்கு நிட்சயமாக இலங்கை அரசாங்கத்தின் உதவியும் ஒத்துழைப்பும் தேவை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

லிபரல் கட்சியின் தேர்தல் கால அறிக்கை கீழேயுள்ளது.

 

 
சிறிலங்காவோடு இணக்கப்பாட்டுடன் நடப்பதாயின் பின்பற்றவேண்டிய மூன்று கடப்பாடுகளை கனடாவின் லிபரல் கட்சி முன்மொழிந்துள்ளது.

one
1. இலங்கையில் பொறுப்புக் கூறல் ஐக்கிய நாடுகள் அவை ஆணையாளர் அவர்களால் நடத்தப்பட்ட புலன் விசாரணை அறிக்கைகையின் (OISL) அடிப்படையில் ஒக்டோபர் 01, 2015 அன்று சிறிலங்கா பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை (ஐநாமஉஅ) நிறைவேற்றிய தீர்மானத்தை நாங்கள் எச்சரிக்கை கலந்த நம்பிக்கையோடு வரவேற்கிறோம்.

b. நியூயார்க் / ஜெனீவா நகரங்களில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையில் மனித உரிமைகள் அவையின் தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு கனடா அதன் இராஜதந்திர செல்வாக்கை பயன்படுத்த வேண்டும்.

c. கனடா, ஐ.நா. மனித உரிமைகள் அவையின் உரிமைக் கட்டளைக்கு அமைய உருவாக்கப்பட்ட கலப்புப் பொறிமுறைக்கு எங்கள் நிபுணத்துவத்தை (புலனாய்வாளர்கள், வழக்குத்தொடுநர், நீதிபதிகள்) நல்க வேண்டும்.

d. இலங்கையில் பொறுப்புக் கூறலை அடைவது பற்றிய முன்னேற்றத்தை கனடா தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கனடா UNHRC இன் 32 வது மற்றும் 34 வது அமர்வுகளில் இராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்பதுடன் தேவையேற்படும் போது ஐக்கிய நாடுகள் அவையில் கூடுதலான தலையீட்டையும் மேற்கொள்ள வேண்டும்.

e. கனடாவில் வசிக்கும், போர்க் குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை இழைத்தவர்கள் மீது உலகளாவிய சட்டதிட்டங்களின் கீழ் வழக்குத் தொடர வேண்டும்.

f. சிறிலங்காவின் ஆயுதப் படைகளின் கட்டளை அதிகாரிகளாக எவரேனும் செயற்பட்டிருந்தால் அப்படிப்பட்டவர்கள் பயணம் மேற்கொள்வதற்கு எதிராக நாங்கள்
பயணத்தடையை நடைமுறைப் படுத்த வேண்டும்.

g. இலங்கையில் 1948 ஆம் ஆண்டு தொடக்கம் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை உட்பட தீவிர அனைத்துல குற்றங்கள் இழைத்தோருக்கு எதிராக ஒரு குற்றவியல், அனைத்துலக, சுதந்திர புலன்விசாரணை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதை நாம் வற்புறுத்துவோம்.
two
(2) நீண்ட கால அரசியல் தீர்வு
a. கனடா லிபரல் அரசு இலங்கையில் சமாதானம் மற்றும் உறுதித்தன்மை நிலவ வேண்டும் என்றால் தமிழர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினர் ஆகியோரது சட்டப்படியான குறைகளை நீக்குவதற்கு ஒரு நீண்ட கால அரசியல் தீர்வு அவசியம் எனக் கருதுகிறது.
b. இலங்கையில் ஒரு அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படுவதற்கு முயற்ச்சிக்கும் அனைத்து தரப்புக்களையும் கனேடிய அரசு ஆதரிக்க வேண்டும்.
c. தமிழ்த் தேசிய இனம் மற்றும் இதர சிறுபான்மையினரது பாதுகாப்பு உறுதிப்படுத்தப் படவேண்டும் என நாம் நம்புகிறோம்.
d. கனடா இணைப்பாட்சி (சமஸ்டி) பற்றிய நிபுணத்துவத்தை (இலங்கைக்கு) வழங்க முடியும் என நாம் நம்புகிறோம்.
three
(3) போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல்
a. உள்ளூர் மற்றும் கனடிய அரச சார்பற்ற அமைப்புகளுடன் சேர்ந்து போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தேவைபற்றி ஒரு மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும்.
b. கனடாவின் உதவிகள் பின்வரும் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்பது உறுதிசெய்யப் படவேண்டும்.
மனவேதனைக்கு உள்ளானவர்களுக்கு மனவள ஆலோசனை பெறுவதற்கும், பெண்களின் முன்னேற்றத்திர்க்கு அதிகாரம்கொடுப்பதற்கும் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் இடையில் கூட்டுறவு மற்றும் பரிவர்த்தனை மூலம் உதவி வழங்கல்.
“ஜஸ்ரின் ரூடோ இலங்கைத் தீவில் அமைதி ஏற்பட வேண்டும் என்றால் பொறுப்புக் கூறல் அவசியம் என தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்,
இலங்கையுடனான இணக்கப்பாடு என்பது கனடாவின் மூன்று கடப்பாடுகளின் நிறைவேற்றத்தில் தங்கியுள்ளது.

பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் ஆகியவற்றை அடைவதற்கு கனடா மிகவும் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியத்தை ஜஸ்ரின் ரூடோ வற்புறுத்தி வந்துள்ளார்”.

“கனடா இலங்கையோடு இணங்கி நடப்பது என்ற இந்த முக்கியமான நடவடிக்கை எந்தவிதமான, ஒளிவு மறைவுகளும் இன்றி, வெளிப்படைத்தன்மையுடன், கனடாவின் மற்றைய சர்வதேசக் கடமைகளுடன் ஒத்ததாகவே இருக்கும்.

கனடாவுக்கு மனித உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றுக்கு ஆதரவளித்தல் தொடர்பான நீண்ட கால வரலாறு உண்டு.

அதே போல் இலங்கை பற்றிய மூன்று கடப்பாடுகளை கடைப்பிடித்தல் அந்தத் தீவின் நீண்டகால சமாதானத்தை அடைவதற்கு உதவியாக இருக்கும்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News