Tuesday, March 21, 2023
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Business

சரவணபவன் என்றால் அறுசுவை. அறுசுவை என்றால் சரவணபவன் என்று கூறும் அளவுக்கு இன்று கனடாவில் பல கிளை நிறுவனங்களை நிறுவி புகழ் பெற்ற சைவ உணவகமாக செயல்படுகிறது சரவணபவன் என்ற உணவகம்.

May 29, 2016
in Business
0
Easy24News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இன்று அன்னையர் தினம். அன்பை வாரி வழங்கும் மனிதத் தெய்வங்களை நன்றியுடன் நினைத்து வாழ்த்து சொல்லும் தினம்.கனடாவில் மட்டுமின்றி உலகளாவியரீதியில் பல தொழில் நிறுவனங்களை அமைத்து தொழில் முயற்சிகளில் தொடர்ச்சியாக வெற்றிவாகை ஈட்டிவரும் பிரபல தொழில் அதிபர், சமூக தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமாரின் தலைமைத்துவத்திலும் உரிமையாளராகவும் நேரடிக்ககட்டுப்பாட்டில் கனடாவில் சரவணபவன் என்ற உணவகத்தினை ஸ்காபுரோ மற்றும் மிஸ்சிசாகா ஆகிய நகரங்களில் கிளைகளை மிகவும் சிறப்பான முறையில் நடாத்திவரும் அவர்களின் சரவணபவன் கிளை அமைந்துள்ள மிஸ்சிசாகா நகரின் மையப்பகுதியில் மிகப்பொலிவுடன் பல வாடிக்கையாளர்களை அரவணைத்துள்ள சரவணபவன் உணவகம் நோக்கி இன்று காலையில் சென்றேன். சரவணபவன் உணவகத்திற்கு முன்பாக ஏராளமான வாகன தரிப்பிட வசதிகள் இருப்பதினால் வாகனத்தினை தரித்துவிட்டு சரவணபவன் நோக்கி சென்றேன். ஆச்சரியம்! ஏராளமான வாடிக்கையார்களின் வருகையினால் நெரிசலினூடாக உள்நுழைந்த எனக்கு ஏ ஆர் ரகுமானின் இனிமையான ராகத்தில் அமைந்த பாடல் வரிகள் சந்தோசத்தினை உண்டு பண்ண வைத்தது. முகாமையாளர் மீரா அவர்கள் உணவகத்தில் கடமையில் இருந்தவர்களுடன் மிகவும் உசாராக நேரடி கண்காணிப்பில் இருப்பதனை அவதானித்தேன். உணவகத்தின் மையப்பகுதியில் மிகவும் சூடான உணவு வகைகள் வைக்கப்பட்டிருப்பதனை அவதானித்து வாடிக்கையாளர்கள் பல்வேறு விதமான உணவு வகைகளை வெள்ளித்தட்டினை கையில் ஏந்தியவாறு தங்களுக்கு விரும்பிய உணவு பதார்த்தங்களை தெரிவு செய்வதில் முனைப்பாக ஈடுபட்டிருப்பதனை அவதானித்தேன். பல்வேறு சமூகத்தினை சேர்ந்த வாடிக்கையாளர்கள் உணவகம் முற்றிலும் நிரம்பி வழியத் தொடங்கின. ஊழியர்கள் வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்கு தேவையான இருக்கைகளை வழங்கிவந்ததை அவதானித்தேன். சைவ உணவகங்களில் பல இடங்கள் இருந்தாலும், பெரும்பாலான உணவகங்களில் வழக்கமான தோசை, இட்லி போன்றவைதான் இருக்கும். அதில் என்ன ஸ்பெஷலாய் இருந்துவிடப் போகிறது என்ற எண்ணத்தை உடைத்த உணவகம் சரவணபவன் என்ற சைவ உணவகம் எனக்கூறுவதில் வியப்பொன்றும் இல்லை. இட்லி, தோசை, உளுந்து வடை, மசாலா தோசை, உப்புமா, பூரி, வெரைட்டி ரைஸ், சப்பாத்தி, பரோட்டா பல்வேறுவகையான சிற்றுண்டி வகைகள், பொங்கல் போன்ற அயிட்டங்கள் உட்பட ஏராளமான உணவு வகைகள் வாடிக்கையாளர்களுக்கு சந்தோசத்தினை அளித்த உணவுகளாக காணப்பட்டது. குறிப்பாக உளுந்துவடை சராசரியாக ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் முடியும்தறுவாயில் மீண்டும் மீண்டும் நிரப்பப்பட்டன. அதேபோல மினி இட்டலி, சாதாரண இட்டலி, மினி மசாலா தோசை ஆகியனவும் வாடிக்கையாளர்கள் இருக்கும் இடம் நோக்கி தாராளமாக பரிமாறப்பட்டன. எல்லா இடத்திலும் இவ்வாறான உணவு வகைகள் இருப்பினும் சரவணபவன் உணவகத்தில் சுவைத்துப் பார்த்தால் நிச்சயம் ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும். முக்கியமாக அவர்கள் ஊற்றும் சாம்பார், மற்றும் பல்வேறுவிதமான சட்னி வகைகள் அட்டகாசமாய் இருக்கும். தூய்மையான அமைதியான இனிமையான சூழலில் இன்னிசையை கேட்டுக்கொண்டே அறுசுவை சைவ உணவு வகைகளை சாப்பிட ஆசைப்படுபவர்கள் சரவணபவன் உணவகத்தை நாடலாம் என்பதனை கூறுவதில் மிகுந்த சந்தோசம் அடைகின்றேன். சரவணபவன் என்றால் அறுசுவை. அறுசுவை என்றால் சரவணபவன் என்று கூறும் அளவுக்கு இன்று கனடாவில் பல கிளை நிறுவனங்களை நிறுவி புகழ் பெற்ற சைவ உணவகமாக செயல்படுகிறது சரவணபவன் என்ற உணவகம். தமிழர்களின் தொன்மையான உணவு வகைகளுடன் இலங்கை, தென் இந்திய தமிழர்களின் பண்பாட்டு உணவு வகைகளையும் பரிமாறுவதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் விளங்குகிறது சரவணபவன் என்ற உணவகம். அமைதிக்கும் தூய்மைக்கும் இந்த உணவகத்தில் முதலிடம் தரப்பட்டுள்ளதோடு முற்றிலும் நூறு விழுக்காடு சைவ உணவுகளே பரிமாறப்படுகின்றன. அதன் காரணமாகவே ஆலய குருமார்கள் உட்பட புத்த சமய மடாதிபதிகளும் சிவாச்சாரியார்களும் புகழ்பெற்ற ஆசிரமத் தலைவர்களும், சைவ உணவு பிரியர்களும் ஏன் தென் இந்தியாவில் இருந்துவரும் கவின் கலைகள் மற்றும் சினிமா நடிகை நடிகர்கள், கலைஞர்கள் கூட இந்த உணவகத்தை நாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே வகையான உணவு வகைகள் என்றில்லாமல் வேளைக்கு வேளை உணவு வகைகள் மாற்றப்படுகின்றன என்பதை கூட அறிந்து கொண்டேன். நெய் தோசை, மசாலா தோசை, வெங்காய தோசை, விதம் விதமான தோசைகளும், இட்லி, உப்புமா, பொங்கல் வகைகளும் அதற்கு ஏற்பட தேங்காய் சட்னி, மல்லி சட்னி, வெங்காய சட்னி, தேங்காய் குத்து சம்பல் என்று அறுசுவையாய் பரிமாறப்படுகிறது. மாண்புமிகு திரு கணேஷன் சுகுமாரின் சமூக வேலைத் திட்டங்கள் பற்றி தமிழர்களாகிய நாங்கள் நன்கறிவோம். சரவணபவன் உணவகம் பல வருடங்களாக கனேடிய வைத்தியசாலைக்கு நன்கொடைகளை வழங்கிவருவதனையும் நாம் அறிவோம். இந்த வகையில் இதுவரை 50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும். அண்மையில் டொராண்டோவில் நடைபெற்ற Blends of Barathanaatiyam என்ற நிகழ்ச்சியில் கூட வைத்தியசாலைக்கு என சேர்க்கப்பட 12,001 டொலர்கள் நிதி சேகரிப்பில் கணேஷன் சுகுமார் அவர்களும் பிரதான நன்கொடையாளியாக பங்கெடுத்திருப்பதையும் நாம் இந்த நேரத்தில் நினைவு படுத்துவது சாலச் சிறந்ததாகும். அங்கு வந்திருந்த பல வாடிக்கையாளர்களை நேர்காணல் செய்த போது கனடாவில் பிறந்த ஒரு தமிழ் நாட்டு குடும்பத்தினரையும், பலவருடங்களாக கனடாவில் வசித்துவரும் இலங்கை தமிழ் குடும்பம் ஒன்றினையும், மற்றும் வேற்றின வாடிக்கையாளர்களையும் நேர்காணல் செய்தபோது அவர்கள் கூறிய கருத்துக்களின் பிரகாரம்: தேடினேன் வந்தது. நாடினேன் தந்தது நல்ல உணவை சரவணபவன் என்ற சந்தோசமான உணர்வுடன் உள்நுழைந்தேன். சுத்தமான சுழலில், சுவையான சுகாதாரமான உணவு, வாடிக்கையாளரை உபசரிக்கும் பாங்கு என மனசுக்கும், வயிற்றுக்கும் இதம் தந்தது சரவணபவன். சரவணபவன் முகாமையாளர் வாசலில் நின்று வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்பதை கண்டுகொண்டேன். அடடா எத்தனை உணவுகள்! உணவகம் நிறைந்த வாடிக்கையார்கள். பல்லின வாடிக்கையாளர்கள் அமர்ந்திருந்து பல்வேறுவகையான உணவு வகைகளை உண்டு ருசிப்பதை அவதானித்தேன். மல்லிகைப்பூ இட்லி, மணக்கும் சாம்பார், விதவிதமான கண்ணனுக்கு விருந்தளித்த விறுவிறு சட்னிகள், புது பெண்ணாய் பூரி மசால், பட்டு சப்பாத்தி, கொஞ்சும் குருமா, இளமை ததும்பும் முறுகல் ரவா தோசை, சல் என்று நாவில் இறங்கும் சாம்பார் வடை, வழுக்கி விழும் நெய் பொங்கல், ஆட்டம் போடும் அடை அவியல், தயிர் சேமியா, வித்யாசமாய் ஓட்ஸ் உப்புமா, ஐந்து வகை தோசை, நித்தமும் கமகம, சரி, கம கமன்னு சங்கீதம் பாட வைக்கும் காபியும் உண்டு. சில்லுனு பழசாறும் உண்டு. மசாலா தோசையின் இமயம் சரவணபவன் என்று கூறினால் அதுமிகையாகாது. விதம் விதமான பல அளவுகளிலான மசாலா தோசை. மேலாக உளுந்துவடை தாராளமாக வழங்குவதுடன் மினி மசாலா தோசையினை ஒவ்வொரு வாடிக்கையாளரினை நோக்கி கொடுக்கின்ற சேவையினை நேரில் பார்த்தேன். சரவணபவன் வெற்றிக்கு காரணம் அதன் நிறுவனர் உழைப்பால் உயர்ந்த மனிதர், திரு கணேஷன் சுகுமார் அவர்கள். வாடிக்கையாளர்களே தெய்வம். அவர்தம் சேவையை திருப்பணி என்ற மனப்பாங்கு உடையவர். பதவி வரும் போது பணிவு வர வேண்டும் என்பதற்கேற்ப உயர்விலும் எளிமை மிக்கவர். தன் தொழில் அக்கறையால், கடின வெற்றியை தக்க வைத்து, தொடர் வெற்றிகளின் சாதனையாய் சரவணாவின் பல்வேறு கிளைகளை பரப்பியுள்ளார். பல வாடிக்கையாளர்களின் வேண்டுதல்களுக்கு இணங்க மேலும் பல கிளைகளை நிறுவும் முயற்சியில் ஆர்வத்துடன் உள்ளார்கள். சரவணபவானின் Buffetக்கு ஓர் தனித்துவமான சிறப்பு உண்டு. விதம் விதமான உணவுவகைகள் குறிப்பாக சைவ கறிவகைகள், இனிமை தரும் பலகார வகைகள், பல நிறங்களிலான சுவை தரும் சட்னிகள், பல பிரிவுகளைகொண்ட வெள்ளித்தட்டுக்கள், உணவினை ருசித்து சாப்பிடுகின்றபோது இன்பம் கலந்த சந்தோசத்துடன் உண்டு மகிழ காதிற்கு இனிமை சேர்க்கும் தேன்மதுர பாடல்கள் மற்றும் ஒளிபரப்பு செய்யும் வீடியோ பதிவுகள் என எல்லாம் ஒன்று சேர்ந்த உணவகம்தான் சரவணபவன். அம்மா தினம் ஆதலினாலும் ஞாயிற்று கிழமை காலை மற்றும் மதிய உணவு நேரத்தில் சென்றிருந்த நான் சமையலறையில் மிகவும் சுறு சுறுப்பாக பல்வேறுவிதமான உணவு வகைகளை தயாரித்துக்கொண்டிருந்த உணவு தயாரிப்பு வித்தகரும் தலைமை சமையலறை அதிகாரியுடன் ஓர் நேர்காணலை ஏற்படுத்தி இருந்தேன். அவர்கள் பல்வேறுவிதமான தோசை வகைகளை எவ்வாறு செய்வது என்பதினை விளக்கி 5′, 7″ நீளமான மசாலா தோசையினை எவ்வாறு தயாரிப்பது என்றும் அதே நீளமுள்ள பேப்பர் தோசையினை எவ்வாறு செய்வதென்றும் விளக்கங்களை தந்து அவற்றை தயாரித்தும் காட்டினார்கள். மிகவும் சிறப்பு தேர்ச்சி பெற்ற சமையல் வித்தகர்களை சரவணபவன் உணவகம் கொடிருப்பதனை நேரில் அவதானித்தேன். மேலும் அங்கு பிரதான சமையல் அதிகாரிக்கு உறுதுணையாக இருப்பவர்கள் கூட மிகவும் சுத்தமான முறையில் உடனுக்குடன் சகல உணவு வகைகளையும் தயாரித்துக்கொண்டிருப்பதனையும் அவதானித்தேன். வாடிக்கையாளர்களை தொடர்ச்சியாக சிறப்பான முறையில் பாராமரிப்பதனையும் நேரில் அவதானித்துக்கொண்டென். ஒரு கட்டத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்திருந்தும் தொழில் புரிபவர்கள் அனைவரும் அவர்களை இன்முகத்துடன் அதிக நேரம் காத்திருக்காமல் உள்வாங்கிக்கொண்டதனையும் அவதானித்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். சிறப்பான சைவ உணவகம் சரவணபவன் என்று கூறுவதில் பெருமிதம் கொள்கின்றேன். அண்மையில் மேற்கோள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் சரவணபவன் உணவகம் ஐந்து நட்சத்திர நிலையில் முதன்மை நிலையில் சைவ உணவகமாக இடம்பிடித்திருப்பதனையும் கூறுவதில் பெருமிதம் கொள்கின்றேன். ஒரு தமிழரின் தொழில் முயற்சி இந்த கனேடிய மண்ணில் நிலையான அந்தஸ்தினை பெற்றிருப்பதையிட்டு மகிழ்வதோடு தமிழ் மக்கள் ஆகிய நாங்கள் அனைவரும் கணேஷன் சுகுமாரின் தொழில் முயற்சிகளை வாழ்த்துவதுடன் அவர்களின் தொடர்ச்சியான நிதி அன்பளிப்பு திட்டங்கள் எவ்வித தடைகளும் இன்றி முன்னெடுத்து செல்ல வாழ்த்துவதோடு அவர்கள் தமிழர் தாயகத்தில் உள்ள இந்து ஆலயங்களின் புனருத்தாரனத்திற்கு வழங்கிவரும் நிதிப்பங்களிப்பிற்கு நன்றிகளை கூறுவதுடன், மேலாக டொராண்டோவில் உள்ள மிகப்பெரிய ஆலயங்களான ஸ்ரீ துர்கா இந்து ஆலயம் மற்றும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் சித்திர தேர் திருவிழாவின் உபயகாரர்களாக பலவருடங்கள் இருப்பதுடன் மட்டுமன்றி ஏனைய பல இந்து ஆலயங்களின் வளர்ச்சிக்கும் ஆற்றிவரும் சகல நிதி உதவிகளுக்கும் உலகத் தமிழர்கள் சார்பாக இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Langes, FCPA, FCGA
Tamilbc.ca
Easy24news.com
langes lingamDOSAI 3 DOSAI 2 DASAAA

Previous Post

“Spring Splash” huge success!

Next Post

வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் கோவில் “இசை மழை” என்ற மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஓர் நிதி சேகரிப்பு

Next Post
Easy24News

வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் கோவில் "இசை மழை" என்ற மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஓர் நிதி சேகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

August 26, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Easy24News

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம்

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம்

March 21, 2023
இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் அம்ரித்பால் சிங்’ | பஞ்சாப் காவல்துறை தகவல்

இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் அம்ரித்பால் சிங்’ | பஞ்சாப் காவல்துறை தகவல்

March 21, 2023
92 வயதில் 5 ஆவது திருமணம் செய்கிறார் ஊடக அதிபர் முர்டோக்

92 வயதில் 5 ஆவது திருமணம் செய்கிறார் ஊடக அதிபர் முர்டோக்

March 21, 2023
பாகிஸ்தானில் ஆயுதபாணிகளின் தாக்குதலில் 11 பேர் பலி

பாகிஸ்தானில் ஆயுதபாணிகளின் தாக்குதலில் 11 பேர் பலி

March 21, 2023

Recent News

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம்

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம்

March 21, 2023
இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் அம்ரித்பால் சிங்’ | பஞ்சாப் காவல்துறை தகவல்

இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் அம்ரித்பால் சிங்’ | பஞ்சாப் காவல்துறை தகவல்

March 21, 2023
92 வயதில் 5 ஆவது திருமணம் செய்கிறார் ஊடக அதிபர் முர்டோக்

92 வயதில் 5 ஆவது திருமணம் செய்கிறார் ஊடக அதிபர் முர்டோக்

March 21, 2023
பாகிஸ்தானில் ஆயுதபாணிகளின் தாக்குதலில் 11 பேர் பலி

பாகிஸ்தானில் ஆயுதபாணிகளின் தாக்குதலில் 11 பேர் பலி

March 21, 2023
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures