Sunday, June 26, 2022
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

விடுவிக்கப்பட்ட வீட்டில் குடியமர இராணுவம் தடை போடுகிறது! விதவைப் பெண்ணின் அவலம்

July 6, 2016
in News
0
விடுவிக்கப்பட்ட வீட்டில் குடியமர இராணுவம் தடை போடுகிறது! விதவைப் பெண்ணின் அவலம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விடுவிக்கப்பட்ட வீட்டில் குடியமர இராணுவம் தடை போடுகிறது! விதவைப் பெண்ணின் அவலம்

கிளிநொச்சி உதயநகரில் 2010ம் ஆண்டு விடுவிக்கப்பட்ட வீட்டினுள் பதுங்கு குழிஇருப்பதனைக் காரணம் காட்டி இன்றுவரை எம்மைக் குடியமர இராணுவம் தடைபோடுவதாககாணி உரிமையாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் காணி உரிமையாளரான 3 பிள்ளைகளின் தாயாரான திருமதி.திரேஸ் தனேஸ்குமார் தகவல் தருகையில் ,

உதயநகர் மேற்கில் வசிக்கும் நான் இறுதி யுத்தத்தில் கணவரை இழந்து 3 பிள்ளைகளுடன் வாழ்வாதாரத்திற்காக சந்தையில் கடை நடாத்தியே வாழ்ந்து வருகின்றேன்.

இந்த நிலையில் எனது பூர்வீக காணியில் இருந்த வீட்டினில் முன்னர் விடுதலைப்புலிகளின் நிறுவனம் ஒன்று இயங்கியது. இதன்போது அவர்கள் ஓர் பதுங்கு குழியினை அமைத்திருந்தனர்.

மீள் குடியமர்வின்போது 2010ம் ஆண்டு எனது வீட்டில் குடியிருந்த வேளையில் வீட்டிற்கு வந்த இராணுவத்தினர் பதுங்கு குழியினை அழிக்க வேண்டும் அதுவரை இங்கு குடியிருக்க வேண்டாம். எனத் தெரிவித்தனர்.

அதன்பிரகாரம் நான் மீண்டும் இடம்பெயர்ந்து தாயாரின் வீட்டில் சிரமத்தின் மத்தியில் 6 ஆண்டுகளாக வாழ்கின்றேன்.

குறித்த பதுங்கு குழியினை உடைத்து என்னை குடியமர அனுமதிக்குமாறு கோரி இராணுவத் தலமையகம் , மனித உரிமை ஆணைக்குழு அனைத்திலும் முறையிட்டேன்.

காலம் கடத்தப்படுகின்றதே அன்றி இன்றுவரை எந்த தீர்வும் இல்லை. இதனால். நானும் பிள்ளைகளும் மன உளைச்சலுடனேயே வாழ்கின்றோம்.

தற்போது இதனை கூறி அடிக்கடி வரும் இராணுவத்தினர் ஏதாவது காரணம் கூறுகின்றனரே தவிர பதுங்கு குழியினை இன்றுவரை அழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இது தொடர்பில் கடந்த மாதம் வந்த இராணுவத்தினர் தாம் விரைவில் பதுங்கு குழியினை அழிக்கவுள்ளதாகவும் அதன்போது வீடும் இணைந்தே அழிக்கப்படும் எனத் தெரிவிக்கின்றனர்.

3 பிள்ளைகளுடன் கணவர் இன்றி , இருப்பிடமும் இல்லாமல் வாழும் எனது வீட்டையும் அழித்து வெறும் கற் குவியலை வழங்கினால் நான் எவ்வாறு வாழ்வது என கோரி நிற்கின்றார்.

இது குறித்து கரைச்சிப் பிரதேச செயலாளர் நாகேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

அப்பிரதேசங்கள் முழுமையாக மீள்குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் குறித்த வீடு தொடர்பில் எனது கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது .

இது தொடர்பில் இராணுவத்தினருடன் பேசியபோது அவர்கள் இதனை அகற்றுவதற்கு பெரும் தொகைப்பணம் தேவைப்படுவதனால் பிரதேச செயலக ஒதுக்கீட்டில் வழங்க முடியுமா எனக் கோரினர்.

அவ்வாறான செயல்களிற்கு பிரதேச செயலக ஒதுக்கீட்டில் இடமில்லை என்பதனைச் சுட்டிக்காட்டினேன்.

தாம் அந்தப் பணியை மேற்கொள்வதாக தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை இடம்பெறவில்லை. என்றார்.

Tags: Featured
Previous Post

எனது மகளை தூக்க யாரும் வரவில்லை: நந்தினியின் தந்தை கண்ணீர்

Next Post

முன்னாள் போராளி தம்பதியினர் புலனாய்வுப் பிரிவினரால் கைது!.

Next Post
முன்னாள் போராளி தம்பதியினர் புலனாய்வுப் பிரிவினரால் கைது!.

முன்னாள் போராளி தம்பதியினர் புலனாய்வுப் பிரிவினரால் கைது!.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
பொருளை வைத்து குணத்தை மதிப்பிடாதே! – கிருபா பிள்ளை பக்கம்

புதுப்பொலிவுடன் உங்கள் ஈஸி24நியூஸ்! | கிருபா பிள்ளை

May 17, 2022
ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

நாளைய அரங்கேற்றத்திற்கு மகிந்த இன்று திடீர் வருகை

May 18, 2022
சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

May 27, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாமில் ஜெவ்றி வெண்டர்சே 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாமில் ஜெவ்றி வெண்டர்சே 

June 26, 2022
கெளரவமான சம்பளம் ஆசிரியர்களுக்கு கட்டாயமாக கொடுக்க வேண்டும்!

கொள்ளையடித்து பொருளாதாரத்தை சீரழித்தவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்க! | பேராயர்

June 26, 2022
கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரு தெரிவுகளைக் கூறும் தாயான்

கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரு தெரிவுகளைக் கூறும் தாயான்

June 26, 2022
சீர்திருத்தப்பட்ட நிறைவேற்று அதிகார முறைமையே தமிழர்களுக்கு அவசியம் : தயான்

‘ஜனாதிபதி கோட்டா’ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேச ஒத்துழைப்பும் கிடைக்காது | கலாநிதி தயான்

June 26, 2022

Recent News

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாமில் ஜெவ்றி வெண்டர்சே 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாமில் ஜெவ்றி வெண்டர்சே 

June 26, 2022
கெளரவமான சம்பளம் ஆசிரியர்களுக்கு கட்டாயமாக கொடுக்க வேண்டும்!

கொள்ளையடித்து பொருளாதாரத்தை சீரழித்தவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்க! | பேராயர்

June 26, 2022
கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரு தெரிவுகளைக் கூறும் தாயான்

கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரு தெரிவுகளைக் கூறும் தாயான்

June 26, 2022
சீர்திருத்தப்பட்ட நிறைவேற்று அதிகார முறைமையே தமிழர்களுக்கு அவசியம் : தயான்

‘ஜனாதிபதி கோட்டா’ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேச ஒத்துழைப்பும் கிடைக்காது | கலாநிதி தயான்

June 26, 2022
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures