Saturday, June 25, 2022
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்துவதற்கு எதிராக இலங்கை தமிழர் அரசுக்கு எழுதிய உருக்கமான கடிதம்!

June 9, 2016
in News, Politics
0
பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்துவதற்கு எதிராக இலங்கை தமிழர் அரசுக்கு எழுதிய உருக்கமான கடிதம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்துவதற்கு எதிராக இலங்கை தமிழர் அரசுக்கு எழுதிய உருக்கமான கடிதம்!

HS1

பிரித்தானியாவில் வசித்து வரும் இலங்கை தமிழர் ஒருவர் தாய்நாடான இலங்கைக்கு தன்னை நாடுகடத்துவதை தடுக்குமாறு அரசாங்கத்திற்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கம்சன் சிவக்குமார்(22) என்ற பெயருடைய அவர் நாடாளுமன்ற உறுப்பினரான ஜுலியன் பிரேசியர் மற்றும் உள்துறை அலுவலக செயலாளர் ஆகியர்வர்களுக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்:

கடந்த 2012ம் ஆண்டில் தனக்கு 18 வயதாக இருந்தபோது ஒரு கடத்தல் கும்பல் என்னை பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு நாடு கடத்த முயன்றது.

இதற்காக, அவர்கள் என்னிடம் போலியான சில ஆவணங்களையும் அளித்து அவற்றை பயன்படுத்திக்கொள்ளுமாறு கூறினார்கள்.

ஆனால், போலியான ஆவணங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக பொலிசார் என்னை கைது செய்தனர். அப்போது தான் கடத்தல் கும்பல் என்ன திட்டம் தீட்டினார்கள் என எனக்கு தெரியவந்தது.

இது தொடர்பாக உடனடியாக பொலிசாரிடம் பேசினேன். நான் அளித்த தகவல்கள் மூலம் சர்வதேச அளவில் புலம்பெயர்ந்தவர்களை கடத்தும் கும்பலை பொலிசார் கண்டுபிடிக்க உதவியது.

சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேரை கைது செய்யவும் எனது தகவல்கள் உதவின. ஆனால், தற்போது பிரித்தானிய உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அலுவலக அதிகாரிகள் என்னை இலங்கை நாட்டிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

போலி ஆவணங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக எனக்கு 12 மாதங்கள் சிறை தண்டனையும் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏனெனில், இந்த சமுதாயத்திற்கு நான் ஒரு அச்சுறுத்தலாக இருப்பதாக பொலிசார் நினைக்கின்றனர். ஆனால், இது உண்மையல்ல. நான் வசிக்கும் பகுதியில் உள்ள அனைவருக்கும் நல்ல நண்பராக விளங்கி வருகிறேன். இப்பகுதி மக்களிடையே எனக்கு ஆதரவும் இருக்கிறது.

இதுமட்டுமில்லாமல், British Red Cross, Citizen’s Advice Bureaux மற்றும் Kent Refugee Action Network உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்துள்ளேன்.

தாய்நாடான இலங்கைக்கு என்னை திருப்பி அனுப்பினால், அங்குள்ள அதிகாரிகளால் எனக்கு ஆபத்து இருக்கிறது என்பதை உணர்கிறேன்.

அதேபோல், எனக்கு மற்றொரு பெரும் அச்சமும் தற்போது எழுந்துள்ளது. கிரவுன் நீதிமன்றத்தில் சில கடத்தல் கும்பலுக்கு எதிராக நான் ஆதாரங்கள் அளித்தேன்.

சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் அனைவரும் இலங்கை குடிமகன்கள் தான். இவர்களின் சிறைக் காலம் முடிவு பெற்ற பிறகு, அவர்களும் இலங்கை நாட்டிற்கு நாடுகடத்தப்படலாம்.

இவர்களாலும் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். எனவே, தன்னை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை உடனடியாக தடுக்க வேண்டும்” என கம்சன் சிவக்குமார் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

லண்டனின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம்

Next Post

ஆயுத களஞ்சியசாலை வெடிப்பு திட்டமிட்ட சதி!

Next Post
ஆயுத களஞ்சியசாலை வெடிப்பு திட்டமிட்ட சதி!

ஆயுத களஞ்சியசாலை வெடிப்பு திட்டமிட்ட சதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
பொருளை வைத்து குணத்தை மதிப்பிடாதே! – கிருபா பிள்ளை பக்கம்

புதுப்பொலிவுடன் உங்கள் ஈஸி24நியூஸ்! | கிருபா பிள்ளை

May 17, 2022
ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

நாளைய அரங்கேற்றத்திற்கு மகிந்த இன்று திடீர் வருகை

May 18, 2022
சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

May 27, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

கிளிநொச்சியில் சுகாதார ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

கிளிநொச்சியில் சுகாதார ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

June 25, 2022
எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு | 4 பேர் காயம்

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு | 4 பேர் காயம்

June 25, 2022
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

June 25, 2022
இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு!

June 25, 2022

Recent News

கிளிநொச்சியில் சுகாதார ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

கிளிநொச்சியில் சுகாதார ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

June 25, 2022
எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு | 4 பேர் காயம்

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு | 4 பேர் காயம்

June 25, 2022
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

June 25, 2022
இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு!

June 25, 2022
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures