Thursday, June 30, 2022
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

டிஸ்னி லேண்டில் 2 வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்ற பயங்கரம்: பொலிசார் தீவிர தேடல்

June 15, 2016
in News
0
டிஸ்னி லேண்டில் 2 வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்ற பயங்கரம்: பொலிசார் தீவிர தேடல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

டிஸ்னி லேண்டில் 2 வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்ற பயங்கரம்: பொலிசார் தீவிர தேடல்

மூன்று குழந்தைகளோடு டிஸ்னி ரிசார்ட்டுக்கு பொழுதுபோக்க சென்ற தம்பதிகளின் 2 வயது குழந்தையை திடீரென முதலை நீருக்குள் இழுத்துச் சென்றது, இதை அறிந்த ஃபுளோரிடா பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

டிஸ்னிக்கு சொந்தமானது ஆர்லாண்டோவில் உள்ள கிராண்ட் ஃபுளோரிடியன் ரிசார்ட் மற்றும் ஸ்பா. இது டிஸ்னி மேஜிக் ராஜ்யத்துக்கு அருகில் உள்ளது.

இங்கு ஏராளமான பார்வையாளர்கள் குடும்பத்துடன் உற்சாகத்துக்காக வருவது வழக்கம். நெப்ராஸ்கா மாநிலத்தில் இருந்து மூன்று குழந்தைகளுடன் குடும்பமாக ஒரு தம்பதியினர் மன அமைதிக்காக நேற்று(செவ்வாய்க்கிழமை) வந்திருந்தனர்.

அமெரிக்க நேரப்படி இரவு 9 மணியளவில், அங்குள்ள செவன் சீஸ் லகூன் கடற்கரை அருகில் அவர்களுடைய 2 வயது சிறுவன் தன்னிச்சையாக அங்கு விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, திடீரென ஒரு முதலை கரைக்கு வந்து சிறுவனை நீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டது.

இதை சற்று தாமதமாகவே சுற்றி இருந்தவர்கள் அறிந்துள்ளனர். சிறுவனின் தந்தை உடனே நீருக்குள் பாய்ந்து தேடினார். எவ்வளவு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.

விவரம் பரவிய உடனே ஐம்பது பொலிஸ் மற்றும் வன விலங்கு நிபுணர்கள் தீவிரமாக தேடுகின்றனர் ஆனால், குழந்தையை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மேலும், முதலை இழுத்துச் சென்ற சிறுவனை இனியும் மீட்க நினைப்பது வீண் முயற்சிதான் என அங்குள்ள அதிகாரிகளில் ஒருவரான ஷெரீஃப் ஜெர்ரி டெமிங்ஸ் கூறுகிறார்.

பலியான சிறுவனின் தாய், தந்தையர் கண்ணீருடன் கதறி அழுதது அங்கு எல்லோருடைய மனதையும் கரைத்தது.

டிஸ்னியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த சோகமான சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அதே சமயம், டிஸ்னி நிறுவனத்தின் புகழை சீரழிக்க கூடியது என்றார்.

மன அமைதிக்காக, சுகமான இடங்களுக்கு குடும்பத்துடன் செல்பவர்கள் அங்குள்ள ஆபத்துகளையும் அதற்குரிய பாதுகாப்புகளையும் அறிந்திருப்பது அவசியம்.

அதுவும் விழிப்புணர்வு இல்லாத குழந்தைகளை எச்சரிக்கையாக வைத்துக்கொள்வது மிக அவசியம். அது தவறினால், கொஞ்சநேர சந்தோஷத்திற்காக வந்துவிட்டு, வாழ்க்கை முழுதும் அழவேண்டிய துன்பத்தை இதுபோல வாங்கிச் செல்ல நேரும்.

Tags: Featured
Previous Post

அமெரிக்கா வோல்மார்டில் துப்பாக்கிச் சூடு

Next Post

இளம்பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய நபர்: பொலிசாரிடம் கூறிய பகீர் வாக்குமூலம்

Next Post
இளம்பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய நபர்: பொலிசாரிடம் கூறிய பகீர் வாக்குமூலம்

இளம்பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய நபர்: பொலிசாரிடம் கூறிய பகீர் வாக்குமூலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
பொருளை வைத்து குணத்தை மதிப்பிடாதே! – கிருபா பிள்ளை பக்கம்

புதுப்பொலிவுடன் உங்கள் ஈஸி24நியூஸ்! | கிருபா பிள்ளை

May 17, 2022
ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

நாளைய அரங்கேற்றத்திற்கு மகிந்த இன்று திடீர் வருகை

May 18, 2022
சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

May 27, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

கிளிநொச்சி அம்பாள்குளத்திலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி அம்பாள்குளத்திலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

June 30, 2022
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

வவுனியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவம் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தவர் கைது

June 30, 2022
கத்தார் தொண்டு நிறுவனத்தின் மீதான தடை நீக்கம் – காஞ்சன

கத்தார் தொண்டு நிறுவனத்தின் மீதான தடை நீக்கம் – காஞ்சன

June 30, 2022
நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

எரிவாயுவை பெற்றுக்கொள்ள உலக வங்கியிடம் 70 மில்லியன் டொலர்

June 30, 2022

Recent News

கிளிநொச்சி அம்பாள்குளத்திலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி அம்பாள்குளத்திலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

June 30, 2022
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

வவுனியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவம் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தவர் கைது

June 30, 2022
கத்தார் தொண்டு நிறுவனத்தின் மீதான தடை நீக்கம் – காஞ்சன

கத்தார் தொண்டு நிறுவனத்தின் மீதான தடை நீக்கம் – காஞ்சன

June 30, 2022
நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

எரிவாயுவை பெற்றுக்கொள்ள உலக வங்கியிடம் 70 மில்லியன் டொலர்

June 30, 2022
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures