Saturday, June 25, 2022
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அவுஸ்திரேலியாவுக்கு செல்லவே விரும்புகிறோம்! இந்தோனேசியாவில் உள்ள தமிழ் அகதிகள்

June 20, 2016
in News
0
கரையிறங்கிய இலங்கை புகலிட பெண்களை தடுக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்திரேலியாவுக்கு செல்லவே விரும்புகிறோம்! இந்தோனேசியாவில் உள்ள தமிழ் அகதிகள்

தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 44 தமிழ் அகதிகள் ஒரு வார காத்திருப்புக்கு பின்னர் இந்தோனேசியாவில் தரையிறக்கப்பட்டனர்.

ஏசெஹ் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று அவர்களை சந்திப்பதற்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின்(UNHCR) அதிகாரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே 13,000 த்திற்கும் மேற்பட்ட அகதிகள் இந்தோனேசிய தடுப்பு முகாம்களில் வேறு நாட்டில் குடியமர்த்தப்பட காத்திருப்பதால், இவர்களை இந்தோனேசிய அரசு ஏற்குமா என்ற அச்சம் உள்ளது.

இவர்களை தொடர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்க அனுமதித்தால் அது அவர்களின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்கிறது மனித உரிமை அமைப்புகள்.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றால் எங்களுக்கு நல்ல வாழ்வும் நல்ல சம்பளமும் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர் அகதிகள்.

தாங்கள் அதற்காகவே அவுஸ்திரேலியாவுக்கு கடல் பயணம் மேற்கொண்டதாக கூறுகின்றனர். அதற்காக ஒரு நபருக்கு ஒன்றரை லட்சம் இந்திய ரூபாயை ஏஜெண்ட்டுக்கு கொடுத்து வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

தங்களை கூட்டி வந்த நபர் இடையில் தப்பி விட்டதாகவும் சொல்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் அதிகமான முகாம்களில் 60,000 த்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் இருக்கின்றனர்.

25 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு தொடர்ந்து இந்தியாவில் குடியுரிமை மறுக்கப்படுவதால் இப்படியான முடிவை அகதிகள் எடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இலங்கையில் போர் சூழல் இல்லை என்றாலும் அங்கு நடக்கும் தொடர்ச்சியான கைதுகளும் விசாரணைகளும் தமிழகத்திலுள்ள அகதிகளுக்கு அச்சத்தினை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் நல்ல வாழ்விற்கான தேர்வு அவுஸ்திரேலியா பயணம் என்ற கருத்து அகதிகளிடம் நிலவுகிறது.

ஆனால் அவுஸ்திரேலியாவின் நிலைக்குறித்து அண்மையில் குறிப்பிட்டுள்ள அவுஸ்திரேலிய எல்லைகள் இறைமை நடவடிக்கைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொற்றெல், படகுகளை திருப்பி அனுப்பும் கொள்கைகளில் எதிர்வரும் அவுஸ்திரேலிய அரசாங்க தேர்தல் தாக்கம் எதனையும் தராது.

அவுஸ்திரேலியா தன்னுடைய கரையோர பாதுகாப்பு கொள்கையை மாற்றுகிறதாக ஆட்கடத்தல்காரர்கள் சொல்வார்கள்.

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக பயணிக்க முயற்சிக்கும் எந்தவொரு ஆட்கடத்தல் படகும் திருப்பி அனுப்பப்படும் என்கிறார்.

இந்த சூழலில் இந்தோனேசியாவில் உள்ள 44 தமிழ் அகதிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

Tags: Featured
Previous Post

ஐ.நா பேரவையில் இலங்கைக்கு எதிரான முதல் பிரேரணையை கொண்டுவந்த தமிழர்!

Next Post

10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

Next Post
10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
பொருளை வைத்து குணத்தை மதிப்பிடாதே! – கிருபா பிள்ளை பக்கம்

புதுப்பொலிவுடன் உங்கள் ஈஸி24நியூஸ்! | கிருபா பிள்ளை

May 17, 2022
ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

நாளைய அரங்கேற்றத்திற்கு மகிந்த இன்று திடீர் வருகை

May 18, 2022
சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

May 27, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

கிளிநொச்சியில் சுகாதார ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

கிளிநொச்சியில் சுகாதார ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

June 25, 2022
எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு | 4 பேர் காயம்

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு | 4 பேர் காயம்

June 25, 2022
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

June 25, 2022
இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு!

June 25, 2022

Recent News

கிளிநொச்சியில் சுகாதார ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

கிளிநொச்சியில் சுகாதார ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

June 25, 2022
எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு | 4 பேர் காயம்

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு | 4 பேர் காயம்

June 25, 2022
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

June 25, 2022
இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு!

June 25, 2022
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures