லண்டனில் மர்மநபர் வெறியாட்டம்: பலியான பெண், 5 பேர் படுகாயம்
மத்திய லண்டனில் வைத்து மர்மநபர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தியதில் ஒரு பெண்மணி உயிரிழந்துள்ளார், 5 பேர் காயமடைந்துள்ளனர்.
Russell Square – இல் வைத்து உள்ளுர் நேரப்படி 11.33 மணியளவில், மர்மநபர் கத்தியை வைத்து மக்களை அச்சுறுத்தியுள்ளார்.
அவனிடம் இருந்து மக்கள் தப்பிக்க முயற்சிக்கையில், பெண் ஒருவரை கத்தியால் குத்தியுள்ளான், மேலும் 5 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளான்.
பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைவதற்கு முன்னரே, அப்பெண்மணி ரத்தவெள்ளத்தில் துடித்து இறந்துபோனார்.
மேலும், காயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அந்த மர்மநபரை கைது செய்துள்ள பொலிசார், அவனை விசாரணை வளையத்திற்குள் உட்படுத்தியுள்ளனர்.
மேலும், இது தீவிரவாத தாக்குதலின் பின்னணியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.