Sunday, June 22, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home World

பேச்சிப்பாறை அணையிலிருந்து 140 கன அடி தண்ணீர் திறப்பு

July 25, 2017
in World
0
பேச்சிப்பாறை அணையிலிருந்து 140 கன அடி தண்ணீர் திறப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பேச்சிப்பாறை அணையிலிருந்து 2 ஆவது நாளாக சனிக்கிழமை விநாடிக்கு 141 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

குமரி மாவட்டத்தில் அணைகளில் நீர் இருப்பு போதிய அளவில் இல்லாத நிலையில், விவசாயிகளின் தீவிர கோரிக்கைக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. அணையிலிருந்து முதலில் விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக விநியோகிக்கப்பட்ட நிலையில், 2 ஆவது நாளான சனிக்கிழமை திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 141 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

மாவட்டத்தில் தற்போது குளத்துப்புரவு பகுதிகளிலேயே அதிக அளவில் நடவுப் பணிகள் நடைபெற்றுள்ளன. ஏறக்குறைய 2000 ஏக்கர் பரப்பில் குளம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் நேரடி விதைப்பாகவும், நாற்றுகள் மூலமாகவும் நடவுகள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில் இப்பயிர்களை கருகாமல் காக்கும் வகையில் குளத்துப்புரவு பகுதிகளுக்கே அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது.

இதையடுத்து அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பிரதான கால்வாய்களான தோவாளை மற்றும் அனந்தனாறு கால்வாய்களில் தண்ணீர் திருப்பி விடப்படாமல் பழையாற்றில் விடப்படுகிறது. இதன் மூலம் தேரூர், சுசீந்திரம் உள்ளிட்ட குளங்களுக்கு இந்தத் தண்ணீர் செல்கிறது.இது குறித்து முன்னோடி விவசாயி செண்பக சேகரபிள்ளை கூறியது: விவசாயிகளின் நீண்ட கோரிக்கைக்குப் பிறகு பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டுள்ளது.

இதில் பிரதான கால்வாய்களில் தண்ணீர் விடப்படவில்லை. பழையாற்றில் மட்டுமே தண்ணீர் திருப்பி விடப்படுகிறது. தற்போது விடப்படும் 141 கன அடி தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு செல்ல வாய்ப்பில்லை என்றார் அவர்.இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியம் கூறியது:

பேச்சிப்பாறை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு சற்று அதிகரிக்கப்பட்டு 141 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் முதலில் குளத்துப்புரவு பகுதிகளுக்கு முக்கியமாகத தண்ணீர் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் பழையாற்றில் தண்ணீர் திருப்பி விடப்பட்டு தேரூர், சுசீந்திரம் உள்ளிட்ட குளங்கள் நிரப்படுகின்றன.

தோவாளை, அனந்தனாறு உள்ளிட்ட கால்வாய்களில் தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. ஓரிரு நாள்களில் இந்தப் பணிகள் நிறைவடைந்து விடும். பின்னர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு அந்தக் கால்வாய்களிலும் தண்ணீர் விடப்படும் என்றார் அவர்.

Previous Post

75 லட்சத்துக்கு ஏலம் போன 1500 மூடை மஞ்சள்!!

Next Post

NEW YORK TIMES யோகி ஒரு தீவிரவாதி என்று குறிப்பிட்டுள்ளது

Next Post
NEW YORK TIMES யோகி ஒரு தீவிரவாதி என்று குறிப்பிட்டுள்ளது

NEW YORK TIMES யோகி ஒரு தீவிரவாதி என்று குறிப்பிட்டுள்ளது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பேருந்துக் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு

இரு அரச பேருந்துகள் மோதி விபத்து : சாரதிகளுக்கிடையில் கடும் வாக்குவாதம்

June 22, 2025
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த எமது மக்களை பிரித்தானியா அரவணைத்தது – செல்வம் 

தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணைய வேண்டும் : செல்வம் எம்.பி பகிரங்கம்

June 22, 2025
பொதுமக்களுக்கு பொறுப்பு கூறுதலை உறுதி செய்வதற்கு அமைச்சுக்களில் விசாரணைப் பிரிவுகள்

உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு : கிளிநொச்சியில் நடைபெறவுள்ள முதல் கௌரவிப்பு

June 22, 2025
அடுத்த ஆண்டு இந்த நாளில் மக்களால் இந்த ஆட்சியாளர்கள் துரத்தியடிக்கப்படுவர் | நளின் பண்டார

பிரபாகரன் தரப்பினருடன் கூட்டு சேர நினைக்கும் அநுர தரப்பு

June 22, 2025

Recent News

பேருந்துக் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு

இரு அரச பேருந்துகள் மோதி விபத்து : சாரதிகளுக்கிடையில் கடும் வாக்குவாதம்

June 22, 2025
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த எமது மக்களை பிரித்தானியா அரவணைத்தது – செல்வம் 

தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணைய வேண்டும் : செல்வம் எம்.பி பகிரங்கம்

June 22, 2025
பொதுமக்களுக்கு பொறுப்பு கூறுதலை உறுதி செய்வதற்கு அமைச்சுக்களில் விசாரணைப் பிரிவுகள்

உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு : கிளிநொச்சியில் நடைபெறவுள்ள முதல் கௌரவிப்பு

June 22, 2025
அடுத்த ஆண்டு இந்த நாளில் மக்களால் இந்த ஆட்சியாளர்கள் துரத்தியடிக்கப்படுவர் | நளின் பண்டார

பிரபாகரன் தரப்பினருடன் கூட்டு சேர நினைக்கும் அநுர தரப்பு

June 22, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures