கடந்த 4ம் திகதி (வெள்ளிக்கிழமை) இரவு 23h00 மணியளவில், வானத்திலிருந்து பாரிய தீப்பிழம்புடன் பெரும் எரிநட்சத்திரம் வீழ்ந்துள்ளது. போர்தோ மற்றும் மார்செய்யின் மேலான வானத்தில் இருந்து இது வீழ்ந்தததைப் பலரும் அவதானித்துள்ளனர்.
எரிகற்கள் தொர்பான ஆய்வு நிறுவனமான International Meteor Organization, மற்றும் பிரான்சின் தேசிய விஞ்ஞான ஆராய்ச்சி மையமான CNRS (Centre national de la recherche scientifique) இன் உப பிரிவான பிரான்சின் விண்வெளி வானியற்பியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரகமும் (Institut d’astrophysique spatiale et directeur de recherches), இது விண்ணிலிருந்து வீழ்ந்த பெரும் எரிநட்சத்திரம் என உறுதிப்படுத்தி உள்ளது.
பெரும் ஒளியுடன் அதியுச்ச வேகத்தில் இது பூமியை நோக்கி வந்து வீழ்ந்துள்ளது. இதற்கான மேலதிக அராய்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.