Monday, May 19, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழ் – முஸ்லிம் மக்கள் தனித்து செயற்பட்டால் பௌத்த பேரினவாதம் நுழையும் – அமீர் அலி

July 23, 2017
in News
0
தமிழ் – முஸ்லிம் மக்கள் தனித்து செயற்பட்டால் பௌத்த பேரினவாதம் நுழையும் – அமீர் அலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் தனித்து செயற்பட்டால் பௌத்த பேரினவாதம் என்றோ ஒருநாள் மாவட்டத்திற்குள் கம்பீரமாக நுழையும் பொழுது பிரச்சனைக்குரிய சமூகமாக மாறப்போவது தமிழ் முஸ்லிம் உறவுகள் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் ஏறாவூர் ஹிதாயத் நகர் பகுதியில் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று (21) பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.
ஐக்கிய தேசிய கட்சி இந்த வருட இறுதிக்குள் உள்ளுராட்சி சபைத் தேர்தலை தொகுதி வாரியாக எழுபது வீதமும், பிரதேச வாரியாக முப்பது வீதமாக நடாத்த வேண்டும் என அவசரப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
கிழக்கு மாகாண சபை உரிய காலத்தில் கலைக்கப்பட வேண்டும்.
மாகாண சபை கலைக்காமல் இருக்க வேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டு வருவதன் மூலம் தான் அதனை நீட்டுவதா என்கின்ற விடயம் சொல்ல முடியும்.
தற்போதைய நடவடிக்கையின் பிரகாரம் மாகாண சபையின் காலத்தை நீடிப்பது கிடையாது என்றும் தெரிவித்தார்.
வாழைச்சேனை மீராவோடை பகுதியில் நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட்ட காணி விடயத்தை பூதாகரமாக்கி மட்டக்களப்பு தேரரை அந்தப் பகுதிக்கு மக்கள் வரவழைத்து நீதி, நியாயம் கேட்கின்ற நடைமுறை வட கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று சொன்னால் இரண்டு சமூகத்திற்கும் பாரிய பிரச்சனையை ஏற்படுத்தும், நிம்மதியாக வாழ முடியாது என்பது என்னுடைய கருத்தாகும்.
பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் தான் தமிழ் பேரும் சமூகம்.
அவர்கள் கற்றுக் கொண்ட பாடம், கடந்த காலத்தில் எதிர்நோக்கிய நஷ்டங்கள், துன்பங்கள் என்ற விடயம் அந்த தரப்பினரால் இன்னுமொரு இனத்தவருக்கு ஏற்படக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றோம்.
வடக்கு கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒற்றுமையாக வாழ்கின்ற சந்தர்ப்பம் இல்லை என்று சொன்னால் காவியுடை தரித்தவர்கள் எமக்கு நீதிபதியாக வருவார்கள் அவ்வாறு வரும்போது நாம் ஒன்றுபடுவதை அவர்களில் சிலர் விரும்பவும் மாட்டார்கள்.
வடக்கில் இடம்பெயர்ந்த ஒன்றரை இலட்சம் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றம் செய்வதன் மூலம் தான் வடபுலத்திலுள்ள தமிழ் முஸ்லிம் உறவு ஐக்கியப்படும் என்பதும், எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் உறவைப்பற்றி பேசுவதற்கு தயாராக இருக்க வேண்டுமாக இருந்தால் முஸ்லிம் தமிழ் மக்கள் விட்டுக் கொடுப்புடனும் வாழ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

Previous Post

இலங்கை தனி ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமான நாடு அல்ல

Next Post

மூன்று மாகாணங்களின் தேர்தலுக்கான வேட்புமனு அறிவிப்பு

Next Post
Easy24News

மூன்று மாகாணங்களின் தேர்தலுக்கான வேட்புமனு அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜனாதிபதியான ரணிலுக்கு சலூட் அடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை | பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

வடக்கு, கிழக்கில் இராணுவத்தை அகற்றினால் பெரும் ஆபத்து: சரத் பொன்சேகா எச்சரிக்கை

May 19, 2025
16ஆவது தேசிய போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் – ஜனாதிபதி பங்கேற்பு!

16ஆவது தேசிய போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் – ஜனாதிபதி பங்கேற்பு!

May 19, 2025
அன்னை நிலத்தை மீட்க வந்த மீட்பர்தான் பிரபாகரன் – சீமான்

அன்னை நிலத்தை மீட்க வந்த மீட்பர்தான் பிரபாகரன் – சீமான்

May 19, 2025
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது – ராஜ்குமார் ரஜீவ்காந்

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது – ராஜ்குமார் ரஜீவ்காந்

May 19, 2025

Recent News

ஜனாதிபதியான ரணிலுக்கு சலூட் அடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை | பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

வடக்கு, கிழக்கில் இராணுவத்தை அகற்றினால் பெரும் ஆபத்து: சரத் பொன்சேகா எச்சரிக்கை

May 19, 2025
16ஆவது தேசிய போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் – ஜனாதிபதி பங்கேற்பு!

16ஆவது தேசிய போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் – ஜனாதிபதி பங்கேற்பு!

May 19, 2025
அன்னை நிலத்தை மீட்க வந்த மீட்பர்தான் பிரபாகரன் – சீமான்

அன்னை நிலத்தை மீட்க வந்த மீட்பர்தான் பிரபாகரன் – சீமான்

May 19, 2025
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது – ராஜ்குமார் ரஜீவ்காந்

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது – ராஜ்குமார் ரஜீவ்காந்

May 19, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures