வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.
வரும் காலம், ஈழத் தமிழ் சமூகத்திற்கு, இன்னல்கள் நீங்கி இனிய விடிவு காலமாக புலர, இறைவனை பிரார்த்திப்போம். உலகம் எங்கும் பரந்து விரிந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் இன்று புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். அத்துடன் புத்தாண்டை கொண்டாடும் சிங்கள சகோதர சமூகத்திற்கும் எமது இதயபூர்வமான வாழ்த்தை பகிர்கிறோம்.
உலகம் பூராவும் இருந்த அன்பு தோழமைகள், அன்பர்கள் ,நண்பர்கள், என் இணைய வாசகர்கள் அனைவரும் எனது பிறந்தநாளில் என்னை அணைத்து சமூக ஊடகங்கள் ,மின்னஞ்சல், தொலைபேசி ,நேரில் என வாழ்த்தி இருந்தீர்கள், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதோடு, மலர்ந்திருக்கும் சித்திரை புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் சகல செளபாக்கியங்களையும் வழங்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
நன்றி – கிருபா பிள்ளை