Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கைதுகளின் மூலம் மீனவர் பிரச்சினை தீர்ந்துவிடாது.!

August 25, 2017
in News
0

கைது­களின் மூல­மாக இலங்கை – இந்­திய மீன­வர்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க முடி­யாது. கைது­களை விடுத்து இந்த மீன­வர்­க­ளுக்கு உத­வி­செய்ய வேண்டும் என புதிய கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ட்ரவிஸ் சின்­னையா தெரி­வித்தார். நவம்பர் முதல் நவீன கண்­கா­ணிப்பு கரு­விகள் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்கை கடற்­படை தலை­மை­ய­கத்தில் நேற்றுமுன்தினம் இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போது இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீ­றிய மீன்­பிடி செயற்­பா­டு­களை தடுக்க எவ்­வா­றான நட­வ­டி­க்கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது என வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

இலங்கை – இந்­திய மீனவர் பிரச்­சினை என்­பது இன்று நேற்று ஆரம்­பிக்­கப்­பட்ட பிரச்­சினை அல்ல. இது மிக நீண்­ட­கால பிரச்­சி­னை­யாகும். சுமார் 100 ஆண்­டு­க­ளாக இந்த கடல் பிரச்­சினை உள்­ளது. இலங்கை கடல் எல்­லைக்குள் இந்­திய மீன­வர்­களின் எல்லை மீறிய மீன்­பிடி நகர்­வுகள் என்­பது விரைவில் தீர்வு பெறக்­கூ­டிய ஒன்­றல்ல. இப்­போது புதிய மீன்­பிடி சட்­டங்கள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. ஆனால் இவற்றின் மூல­மாக தீர்வு ஒன்றை விரைவில் பெற்­றுக்­கொள்ள முடியும் என நாம் நம்­ப­வில்லை. இது­வ­ரையில் கடற்­படை மூல­மாக கைதுகள் இடம்­பெற்­றன, எல்லை தடுப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

எனினும் என்னைப் பொறுத்­த­வ­ரையில் கைது­களை நிறுத்த வேண்டும். மாறாக இந்­திய மீன­வர்­க­ளுக்கு உத­வி­யாக நாம் இருக்க வேண்டும். ஒப்­பந்தம் ஒன்றின் மூல­மாக இதனை நாம் முன்­னெ­டுக்க வேண்டும். இந்­திய மீன­வர்­க­ளுக்­கான கடல் எல்­லையை அடை­யாளம் காட்ட வேண்­டி­யது எமது கட­மை­யாகும். கடல் எல்லை அறி­யாத கார­ணத்­தினால்தான் அவர்­களின் அத்­து­மீறல் இடம்­பெற்று வரு­கின்­றது. எனவே இலங்கை மற்றும் இந்­திய கடற்­ப­டையின் உத­வி­யுடன் அவர்­க­ளுக்­கான கடல் எல்­லையை அடை­யாளப்படுத்தும் நட­வ­டிக்­கைகளை முன்­னெ­டுக்க வேண்டும். இலங்கை மீன­வர்­க­ளுக்கும் இத­னையே நாம் செயற்­ப­டுத்த வேண்டும். மாறாக கைது செய்­வதால் எந்த தீர்வும் கிடைக்­கப்­போ­வ­தில்லை.

நவம்பர் மாதம் தொடக்கம் புதிய கண்­கா­ணிப்பு செயற்­பா­டு­களை ஆரம்பிக்க வுள்ளோம். கடற்படை படகுகளில் இந்த நவீன தொழில்நுட்ப திட்டங்களை கையாளவுள்ளோம்.இந்நிலையில் இந்த முரண்பாடுகளை எம்மால் சரியாக கையாள முடியும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

Previous Post

இரு அமைச்சர்கள் இன்று பதவி ஏற்பு !!

Next Post

தாதிய பயிற்சி நெறிக்கான பதிவுகள் ஆரம்பமும் புதியவர்களுக்கான விண்ணப்பம் கோரலும்

Next Post
தாதிய பயிற்சி நெறிக்கான பதிவுகள் ஆரம்பமும் புதியவர்களுக்கான விண்ணப்பம் கோரலும்

தாதிய பயிற்சி நெறிக்கான பதிவுகள் ஆரம்பமும் புதியவர்களுக்கான விண்ணப்பம் கோரலும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures