சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்களைப் பொறுத்தமட்டில் எமது அரசாங்கம் ஒருபோதும் குற்றவாளிகளைப் பாதுகாக்காது. ஒருவர் எந்தத் தொழிலைப் புரிபவராக இருந்தாலும், அவர் குற்றமிழைத்திருந்தால், உரிய விசாரணைகளின் பிரகாரம் அவர் நீதியின் முன் நிறுத்தப்படுவார் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.













