Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

7 ஆண்டுகளுக்குப் பின் சாதித்த ஓபனிங் பாட்னர்ஷிப்!

November 19, 2017
in Sports
0
7 ஆண்டுகளுக்குப் பின் சாதித்த ஓபனிங் பாட்னர்ஷிப்!

4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் 4-ம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இலங்கை அணி, 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட இலங்கை அணி 122 ரன்கள் முன்னிலை பெற்றது. இலங்கை அணி 250 ரன்களுக்குள் ஆட்டமிழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரங்கனா ஹெராத், அரைசதம் அடித்தார். அவர் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸை ஷிகர் தவானும் – கே.எல்.ராகுலும் தொடங்கினர். முதல் இன்னிங்ஸில் சோபிக்கத் தவறிய இந்த ஜோடி, இந்தமுறை இலங்கை பந்துவீச்சாளர்களை எச்சரிக்கையாக எதிர்க்கொண்டது. அதேநேரம், மோசமான டெலிவரிகளை பவுண்டரிக்கு விரட்டவும் இந்த ஜோடி தவறவில்லை. கே.எல்.ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, தவான் ஒருநாள் போட்டிக்கான பாணியில் பேட்டிங் செய்தார். முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ஷனகா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டிக்வெலாவிடம் கேட்ச் கொடுத்து தவான் ஆட்டமிழந்தார். அவர் 116 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் உதவியுடன் 94 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதையடுத்து கே.எல்.ராகுலுடன், கைகோர்த்த புஜாரா மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டார். மோசமான வெளிச்சம் காரணமாக போட்டி முன்னதாகவே 4.30 மணிக்கு முடித்துக் கொள்ளப்பட்டது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. இதன்மூலம், இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இந்திய அணி 49 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Previous Post

டி.ஆர்.எஸ். முறையைத் தவறாகப் பயன்படுத்திய இலங்கை வீரர்! வெடித்த புதிய சர்ச்சை

Next Post

ஒருநாள் போட்டியில் 490 ரன்கள் குவித்து மலைக்க வைத்த தென் ஆப்பிரிக்க வீரர்

Next Post
ஒருநாள் போட்டியில் 490 ரன்கள் குவித்து மலைக்க வைத்த தென் ஆப்பிரிக்க வீரர்

ஒருநாள் போட்டியில் 490 ரன்கள் குவித்து மலைக்க வைத்த தென் ஆப்பிரிக்க வீரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures