Friday, May 27, 2022
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பணம் அச்சிடப்படாவிட்டால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது | ரணில் எச்சரிக்கை

May 14, 2022
in News, Sri Lanka News
0
நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப் பெறுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பணத்தை அச்சிடவில்லை என்றால் அரச ஊழியர்களுக்கு ஊதியத்தை செலுத்த முடியாமல் போகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பீ.பீ.சி சிங்கள சேவைக்கு நேற்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

பணத்தை அச்சிடுவது எனது கொள்கை இல்லை என்றாலும் பணத்தை அச்சிட நேரிடும். பணத்தை அச்சிடவில்லை என்றால், அரச ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க முடியாது.

மிக உக்கிரமான பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்நோக்கி வருகின்றோம். ஆங்கிலேயர்கள் மற்றும் ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களில் கூட இவ்வாறான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்காது என நான் நினைக்கின்றேன்.

இந்த ஆண்டே எமக்கு மிகவும் கடினமான ஆண்டு. அந்நிய செலாவணி இல்லை. அரசாங்கத்திற்கு வருமானம் கிடையாது. அந்நிய செலாவணியுடன் வர்த்தகங்கள் நடக்கவில்லை என்றால், வருமானம் குறையும்.

ரூபாய் மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அந்நிய செலாவணியுடன் வர்த்தகம் செய்யவில்லை என்றால், வரியை செலுத்த முடியாது. வரி குறைக்கப்பட்டுள்ளது. தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

அந்நிய செலாவணி நெருக்கடியால், ரூபாய் கிடைக்கும் வருமானமும் கிடைப்பதில்லை. தற்போதைய நிலைமையில் சுமார் மூன்று பில்லியன் டொலர்கள் வரை தேவைப்படுகிறது.

இதனை பெற்றுக்கொள்வதே எமக்கு இருக்கும் முதலாவது சவால். அதனை பெற்றுக்கொள்ளவே நான் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.

நாட்டில் வரிசைகளை இல்லாமல் செய்ய வேண்டும். சாதாரண இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த வேண்டும். மக்கள் மூன்று வேளையும் சாப்பிட வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

நடுத்தர வகுப்பு மக்களை முன்னேற்ற வேண்டும். உழைக்கும் மக்களின் வீடுகளுக்கு சிறந்த பொருளாதாரத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களை கொள்வனவு வரிசையில் நிற்கும் யுகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

1977 ஆம் ஆண்டு நாங்கள் இப்படியான வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். திறந்த பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தினோம். மின்சாரம் இன்றி 2001 ஆம் ஆண்டு எமக்கு இருண்ட யுகமாக இருந்தது.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. அவற்றையும் நான் முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை முன்நோக்கி இட்டுச் சென்றேன். 2015 ஆம் ஆண்டும் நாம் பெரும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டது. பொருளாதார வீழ்ச்சியை தடுக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக செய்தோம்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னரும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பினோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம்.

நான் பிரதமராக பதவியேற்ற காலங்களில் மூன்று வேளையும் மக்களுக்கு சாப்பிடும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்தேன். சிறப்பாக வாழ வழியை உருவாக்கினேன்.

தொழில் வாய்ப்புகளை உருவாக்கினேன். தற்போது இந்த சவாலை ஏற்று மக்களுக்கு சிறந்த வாழ்க்கை ஏற்படுத்திக்கொடுக்க நான் எதிர்பார்த்துள்ளேன்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டாலும் இவற்றை செய்ய முடியும். இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சிலும் 1939 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நான்கு உறுப்பினர்களே இருந்தனர். எனினும் பிரதமராக பதவியேற்று போரையும் வென்றார் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடர்பான ஊடக அறிக்கை

Next Post

ரணிலால் டொலரின் விற்பனை விலை குறைந்ததா | வெளியான தகவல்

Next Post
ரணிலால் டொலரின் விற்பனை விலை குறைந்ததா | வெளியான தகவல்

ரணிலால் டொலரின் விற்பனை விலை குறைந்ததா | வெளியான தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
பொருளை வைத்து குணத்தை மதிப்பிடாதே! – கிருபா பிள்ளை பக்கம்

புதுப்பொலிவுடன் உங்கள் ஈஸி24நியூஸ்! | கிருபா பிள்ளை

May 17, 2022
ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

நாளைய அரங்கேற்றத்திற்கு மகிந்த இன்று திடீர் வருகை

May 18, 2022
ரொரன்ரோவில்   முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது நினைவு நாள்

ரொரன்ரோவில் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது நினைவு நாள்

May 19, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இலங்கை

May 27, 2022
ஹற்றன் உணவகம் ஒன்றில் சமையல் எரிவாயு வெடிப்பு

அளவுக்கு மிஞ்சி பதுக்காதீர்கள்! உயிரிழப்புக்களுக்கு நீங்களும் பொறுப்பாளிகளே!

May 27, 2022
பெருந்தொற்றாக மாறுமா ‘மங்கி பொக்ஸ்‘

பெருந்தொற்றாக மாறுமா ‘மங்கி பொக்ஸ்‘

May 27, 2022
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் நடவடிக்கை

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் நடவடிக்கை

May 27, 2022

Recent News

பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இலங்கை

May 27, 2022
ஹற்றன் உணவகம் ஒன்றில் சமையல் எரிவாயு வெடிப்பு

அளவுக்கு மிஞ்சி பதுக்காதீர்கள்! உயிரிழப்புக்களுக்கு நீங்களும் பொறுப்பாளிகளே!

May 27, 2022
பெருந்தொற்றாக மாறுமா ‘மங்கி பொக்ஸ்‘

பெருந்தொற்றாக மாறுமா ‘மங்கி பொக்ஸ்‘

May 27, 2022
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் நடவடிக்கை

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் நடவடிக்கை

May 27, 2022
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures