Monday, August 15, 2022
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தலைக்கேறிய போதையால் வாலிபர்களது முகத்தில் ஆசிட் வீசிய நபர்: 8 ஆண்டுகள் சிறை

August 7, 2016
in News, World
0
தலைக்கேறிய போதையால் வாலிபர்களது முகத்தில் ஆசிட் வீசிய நபர்: 8 ஆண்டுகள் சிறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தலைக்கேறிய போதையால் வாலிபர்களது முகத்தில் ஆசிட் வீசிய நபர்: 8 ஆண்டுகள் சிறை

இங்கிலாந்தில் வாலிபர்களது முகத்தில் ஆசிட் தாக்குதல் நடத்திய நபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Essex – இல் நண்பர்கள் 6 பேர் விருந்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக Ockendon ரயில் நிலையத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, அங்கு வந்த Alexander Bassey (17) என்ற நபர், சிறிது நேரம் ரயில் நிலையத்தில் உலாவியுள்ளார். அதன்பின்னர் ஜாலியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நண்பர்களின் முகத்தில் ஆசிட்டினை தெளித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த ஆசிட் வீச்சின் தாக்கத்தால், அந்த 5 பேரும் வலி தாங்க முடியாமல் தவித்துள்ளனர், இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதில், Lee Elliott என்பவர் மரணத்தின் விளிம்பிற்கு சென்றுள்ளார், மற்றொரு நபரின் இடது காது கேட்கும் திறனை இழந்துள்ளது. மேலும் Tyrone Terry (17) என்ற வாலிபரின் வாய்பகுதி மற்றும் தொண்டை தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றத்தை புரிந்த Bassey- ஐ கைது செய்த பொலிசார், அவனை விசாரணை வளையத்திற்குள் உட்படுத்தினர். சம்பவம் நடைபெற்ற அன்று இவர், அதிக போதையில் இருந்ததன் காரணமாக தன்னிலையை மறந்துள்ளார்.

மேலும், இச்சம்பவத்திற்கு பின்னணி காரணமாக அவர் எதனையும் தெரிவிக்கவில்லை. அந்த வாலிபர்களை இவர், இதற்கு முன்னர் பார்த்ததும் கிடையாது. அந்த நண்பர்கள் அனைவரும் யாரையும் கண்டுகொள்ளாமல் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

போதையின் உச்சத்தில் இருந்த இவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை Basildon Crown நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது. அப்போது குற்றவாளியிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, எதற்காக இப்படி ஒரு காரியத்தை செய்தாய், இது மிகவும் கடுமையான செயல் மட்டும் அல்லாமல் மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இந்த செயலால் அந்த வாலிபர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

மேலும், இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இக்கொடூர குற்றத்தினை புரிந்த அந்நபருக்கு 8 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

விருந்து நிகழ்ச்சியின்போது பயங்கரம்: கத்தியால் தாக்கியதில் 7 பேர் கவலைக்கிடம்

Next Post

65 வயதில் KFC என்ற மிகப்பெரிய பிராண்டை உருவாக்கிய கேணல் சாண்டர்ஸ்

Next Post

65 வயதில் KFC என்ற மிகப்பெரிய பிராண்டை உருவாக்கிய கேணல் சாண்டர்ஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
பொருளை வைத்து குணத்தை மதிப்பிடாதே! – கிருபா பிள்ளை பக்கம்

புதுப்பொலிவுடன் உங்கள் ஈஸி24நியூஸ்! | கிருபா பிள்ளை

May 17, 2022

புளு சட்டை மாறன் யாரின் கைக்கூலி? | கிருபா பிள்ளை கேள்வி

March 13, 2022
சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

May 27, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

தாவடி திருவருள்மிகு அம்பலவாண கந்தசுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா

தாவடி திருவருள்மிகு அம்பலவாண கந்தசுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா

August 15, 2022
ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுமா ‘கொலை’..?

ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுமா ‘கொலை’..?

August 15, 2022
கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தியிருக்கும் ‘சீதா ராமம்’

கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தியிருக்கும் ‘சீதா ராமம்’

August 15, 2022
எஸ்.எல்.சி அழைப்பு டி 20 கிரிக்கெட் இறுதிப் போட்டி நாளை

எஸ்.எல்.சி அழைப்பு டி 20 கிரிக்கெட் இறுதிப் போட்டி நாளை

August 15, 2022

Recent News

தாவடி திருவருள்மிகு அம்பலவாண கந்தசுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா

தாவடி திருவருள்மிகு அம்பலவாண கந்தசுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா

August 15, 2022
ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுமா ‘கொலை’..?

ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுமா ‘கொலை’..?

August 15, 2022
கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தியிருக்கும் ‘சீதா ராமம்’

கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தியிருக்கும் ‘சீதா ராமம்’

August 15, 2022
எஸ்.எல்.சி அழைப்பு டி 20 கிரிக்கெட் இறுதிப் போட்டி நாளை

எஸ்.எல்.சி அழைப்பு டி 20 கிரிக்கெட் இறுதிப் போட்டி நாளை

August 15, 2022
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures