Monday, June 27, 2022
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சர்வதேச விசாரணையை கோருவதன் நியாயம் தெரிகிறதா?

July 30, 2016
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்வதேச விசாரணையை கோருவதன் நியாயம் தெரிகிறதா?

mullai_20090215001 phoca_thumb_l_14thMay2009_InsideSafezone_03  vannitallying_sri_lankas_wardead.jpeg.size.xxlarge.letterbox
mulli
வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று தமிழ் மக்கள் வலியுறுத்துவதற்கு வலுவான காரணங்கள் உண்டு.

வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த இன அழிப்புத் தொடர்பில் உள்நாட்டு விசாரணை நடைபெறுமாகவிருந்தால் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படாமல் போகலாம்.

குறிப்பாக குமாரபுரம் 26 பொதுமக்கள் படுகொலை வழக்கின் தீர்ப்பை குறிப்பிட்டுக் கூறலாம்.

அதேநேரம் தமிழின அழிப்பு எதுவும் நடைபெறவில்லை என்பதுடன் படையினர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதான முடிவுகளே கிடைக்கும்.

இதன்காரணமாகவே போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென தமிழ் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இவ்வாறு சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென வலியுறுத்துவதானது, இந்த நாட்டில் எதிர்காலத்தில் இன ஒற்றுமை ஏற்படுவதற்கு பேருதவியாக அமையும்.

அதாவது போர்க்குற்ற விசாரணையின் போது உள்நாட்டு நீதி பரிபாலனம் சார்ந்தவர்கள் மட்டுமே இடம்பெறுவார்களாயின் அவர்கள் போர்க் குற்றம் புரிந்தவர்களின் அழுத்தங்களுக்கு ஆளாகவேண்டிவரும் என்பதுடன் உண்மையை கண்டறிவதிலிருந்து விலகிச் செல்கின்ற நிலைமையும் ஏற்படக்கூடிய வாய்ப்புண்டு.

இத்தகைய நிலைமை தமிழ் மக்களிடம் மிக மோசமான மனக்கொதிப்பை ஏற்படுத்தும். அதாவது எங்கள் இனத்தை கொன்றொழித்து விட்டு இப்போது போர்க்குற்ற விசாரணை என்ற போர்வையில் போர்க்குற்றவாளிகளை காப்பாற்றுகின்ற கபடத்தனம் நடக்கின்றது என தமிழ் மக்கள் கருதிக்கொள்வர்.

இத்தகைய கருத்தியல் பெரும்பான்மை இனத்தின் மீதான பகையை தணியவிடாமல் கொதி நிலையில் வைக்கச் செய்யும்.

ஆகையால்தான் போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என தமிழ் மக்கள் விரும்புகின்றனர்.

சர்வதேச நீதிபதிகள் விசாரணையை மேற்கொள்ளும் போது போரில் ஏற்பட்ட இழப்புக்களை அவர்கள் கவனத்தில் எடுப்பர் என்பதும், போர்க் குற்றம் இழைத்தவர்களை அவர்கள் வெளிப்படையாக அடையாளப்படுத்துவர் எனவும், போர்க்குற்ற விசாரணையில் எவரையும் பாதுகாக்க வேண்டும் என்ற தேவை அவர்களிடம் இருக்காது என்பதும் தமிழ் மக்களின் திடமான நம்பிக்கை.

இருந்தும் போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறுவதற்கு இம்மியும் அனுமதிக்கப்படமாட்டது என இலங்கை அரசு அடிக்கடி கூறிக்கொள்கிறது.

அதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட, தான் ஜனாதிபதியாக இருக்கும் வரை போர்க்குற்ற விசாரணை தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் வருவதை அனுமதிக்க மாட்டேன் என பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

ஆகப் போர்க்குற்றம் தொடர்பில் ஒரு நீதியான விசாரணையை நடத்த நல்லாட்சியும் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் பங்கேற்றால், நிச்சயமாக போர்க் குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தண்டனை பெறுவர்.

அதிலும் முன்னைய ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டிவரும்.

ஆகையால்தான் சர்வதேச நீதிபதிகளுக்கு இடங்கொடாமல் உள்நாட்டிலேயே விசாரணையை நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது உறுதியாகிறது.

இதன் வெளிப்பாடுகளையும் நாம் காணமுடிகிறதல்லவா?

Tags: Featured
Previous Post

பாதயாத்திரையை நடத்துவது அலிபாபாவும் 40 திருடர்களும்!

Next Post

எழில் – உதயநிதி பட நாயகியாக ரெஜினா ஒப்பந்தம்

Next Post

எழில் - உதயநிதி பட நாயகியாக ரெஜினா ஒப்பந்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
பொருளை வைத்து குணத்தை மதிப்பிடாதே! – கிருபா பிள்ளை பக்கம்

புதுப்பொலிவுடன் உங்கள் ஈஸி24நியூஸ்! | கிருபா பிள்ளை

May 17, 2022
ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

நாளைய அரங்கேற்றத்திற்கு மகிந்த இன்று திடீர் வருகை

May 18, 2022
சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

May 27, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

ராஜபக்ச குடும்பம் சொத்துகளை மறைத்து வைத்துள்ள நாடுகள் குறித்து தகவல்

ராஜபக்ச குடும்பம் சொத்துகளை மறைத்து வைத்துள்ள நாடுகள் குறித்து தகவல்

June 27, 2022
நாட்டின் பல பகுதிகளில் டோக்கன் முறையில் எரிபொருள் விநியோகம்

நாட்டின் பல பகுதிகளில் டோக்கன் முறையில் எரிபொருள் விநியோகம்

June 27, 2022
அயர்லாந்துக்கு எதிரான இருபதுக்கு – 20 போட்டியில் இந்தியாவுக்கு இலகு வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான இருபதுக்கு – 20 போட்டியில் இந்தியாவுக்கு இலகு வெற்றி

June 27, 2022
நாட்டில் டெல்டா திரிபின் புதிய அலகு அடையளம்

கொவிட் வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு

June 27, 2022

Recent News

ராஜபக்ச குடும்பம் சொத்துகளை மறைத்து வைத்துள்ள நாடுகள் குறித்து தகவல்

ராஜபக்ச குடும்பம் சொத்துகளை மறைத்து வைத்துள்ள நாடுகள் குறித்து தகவல்

June 27, 2022
நாட்டின் பல பகுதிகளில் டோக்கன் முறையில் எரிபொருள் விநியோகம்

நாட்டின் பல பகுதிகளில் டோக்கன் முறையில் எரிபொருள் விநியோகம்

June 27, 2022
அயர்லாந்துக்கு எதிரான இருபதுக்கு – 20 போட்டியில் இந்தியாவுக்கு இலகு வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான இருபதுக்கு – 20 போட்டியில் இந்தியாவுக்கு இலகு வெற்றி

June 27, 2022
நாட்டில் டெல்டா திரிபின் புதிய அலகு அடையளம்

கொவிட் வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு

June 27, 2022
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures