Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீண்டும் பயங்கரவாத தாக்குதல்: கார் வெடிகுண்டு தாக்குதலில் குலுங்கியது இஸ்தான்புல்

December 26, 2016
in News
0
மீண்டும் பயங்கரவாத தாக்குதல்: கார் வெடிகுண்டு தாக்குதலில் குலுங்கியது இஸ்தான்புல்

மீண்டும் பயங்கரவாத தாக்குதல்: கார் வெடிகுண்டு தாக்குதலில் குலுங்கியது இஸ்தான்புல்

துருக்கி தலைநனரில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கம் அருகே பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டு 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே அமைந்துள்ளது குறித்த விளையாட்டு அரங்கம். இதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் அதிகாரிகள் என தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிரிழ[ப்புகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. சம்பவத்தின்போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும், பொலிஸ் அதிகாரிகளை குறிவைத்து குறித்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கால்பந்து ரசிகர்கள் அனைவரும் குறித்த தாக்குதலுக்கு முன்பே அப்பகுதியில் இருந்து சென்று விட்டதாகவும், இல்லை என்றால் குறித்த தாக்குதல் பெரும் உயிர்ச்சேதத்தை வரவழைத்திருக்கும் எனவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடந்த பகுதியில் தற்போது பொலிஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மட்டுமின்றி தாக்குதலில் காயம்பட்ட பொலிஸ் அதிகாரிகளை மீட்டு உடனடியாக அருகாமையில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த ஆண்டு இஸ்தான்புல் நகரில் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களுக்கு பொறுப்பேறு ஐ.எஸ் ஆதரவு இயக்கங்கள் அல்லது குர்து பயங்கரவாதிகள் அறிக்கை விட்டிருந்தனர். ஆனால் தற்போது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பிடம் இருந்தும் பொறுப்பேறுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.

Tags: Featured
Previous Post

புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்குள் பிளவு

Next Post

சொந்த மகளையே பட்டினி போட்டு கொன்ற பெற்றோர்: கடின தண்டனை வழங்குமா நீதிமன்றம்?

Next Post
சொந்த மகளையே பட்டினி போட்டு கொன்ற பெற்றோர்: கடின தண்டனை வழங்குமா நீதிமன்றம்?

சொந்த மகளையே பட்டினி போட்டு கொன்ற பெற்றோர்: கடின தண்டனை வழங்குமா நீதிமன்றம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures