Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது போல் ஆடுமாறு கூறினார் தோனி: புவனேஷ் குமார்

August 25, 2017
in Sports
0
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது போல் ஆடுமாறு கூறினார் தோனி: புவனேஷ் குமார்

100 ரன் கூட்டணியை தோனியுடன் அமைத்து இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற புவனேஷ் குமார், தோனி தன்னை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது போல் ஆடுமாறு ஆலோசனை வழங்கியதாக தெரிவித்தார்.

2-வது ஒருநாள் போட்டியில் 131/7 என்ற நிலையில் இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற கூட்டணியில் புவனேஷ் குமார் 53 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

இந்நிலையில் அவர் கூறியதாவது:

டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி ஆடுவேனோ அதே போல் ஆடுமாறு நான் இறங்கியவுடன் தோனி கூறினார். அழுத்தம் எதுவும் இல்லை, நிறைய ஓவர்கள் இருக்கின்றன, முழு ஓவர்களையும் ஆடினாலே நாம் எளிதில் வெற்றி பெறுவோம் என்றார் தோனி.

7 விக்கெட்டுகள் விழுந்த பிறகு இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றே நான் நினைத்தேன். நான் விளையாட முடியும் என்றும் தோனிக்கு ஆதரவாகச் செயல்பட முடியும் என்றும் நம்பினேன். அதைத்தான் செய்தேன்.

நன்றாகத் தொடங்கி பிறகு மளமளவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது எங்களுக்கு சற்றே பதற்றத்தை ஏற்படுத்தியது. ஓய்வறையிலிருந்து எந்த ஒரு மெசேஜும் இல்லை. 47 ஓவர்களையும் ஆடினால் வெற்றி பெற முடியும் என்ற ஒரே வாய்ப்புதான் இருந்தது. அதுதான் என் திட்டமாகவும் இருந்தது.

தனஞ்ஜயாவுக்கு எதிராக ஒரு திட்டம் வைத்திருந்தேன். அவர் ஆஃப் ஸ்பின்னர், ஆனால் லெக்ஸ்பின், கூக்ளி என்று அவர் விதம்விதமாக வீசியது எங்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. கூக்ளியில் அவர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். எனவே அந்தப் பந்துகளை எதிர்கொள்ள முடிவெடுத்தேன். முதலில் அவரது பந்தைக் கணிப்பது கடினமாக இருந்தது. ஆனால் 10-15 பந்துகள் ஆடிய பிறகு அவரது மாற்றங்களை கணிக்க முடிந்தது.

வித்தியாசமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை என்ற நிலை இருந்ததால் சாதாரணமாகவே ஆடினோம். சிங்கிள், இரண்டு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஓடினோம், முண்டியடித்துக் கொண்டு 2வது ரன்னுக்காக ஓட வேண்டிய நிலை இல்லை, அதே போல் பெரிய ஷாட்களுக்கான தேவையும் இருக்கவில்லை, இயல்பான கிரிக்கெட்டை ஆடினோம்.

ஆனால் தோனி, ‘நீ எப்படி விரும்புகிறாயோ அப்படியே ஆடு’ என்றார். ஒரு கட்டத்துக்கு மேல் கொஞ்சம் அடித்து ஆடலாம் என்று ஆடினேன். தோனி அடித்து ஆடு என்று கூறவில்லை, அல்லது அவர் எனக்கு பொறுப்பு எதையும் கொடுக்கவில்லை, தன்னம்பிக்கை ஏற்பட்ட போது நான் ஷாட் ஆடினேன்.

ஒருநாள் போட்டிகளில் அரைசதம் எடுப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஒருநாள் கிரிக்கெட் என் பேட்டிங் பாணிக்கு ஒத்துவராது. பெரிய சிக்சர்களை அடிக்கும் பேட்ஸ்மென் நான் இல்லை. நேற்று முழுதும் டெஸ்ட் போட்டி போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. சஞ்சய் பாங்கருக்கு நன்றி, டெஸ்ட் தொடரின் போது அவர் என் பேட்டிங்கில் நிறைய பயிற்சிகளுக்கு உதவினார்.

இவ்வாறு கூறினார் புவனேஷ் குமார்.

Previous Post

பாகிஸ்தான் செல்லும் உலக லெவன் அணியின் கேப்டனாக டுபிளெசிஸ் தேர்வு

Next Post

3-ம் நிலையில் இறங்கியிருந்தாலும் அந்தப் பந்தில் பவுல்டு ஆகியிருப்பேன்: விராட் கோலி

Next Post
3-ம் நிலையில் இறங்கியிருந்தாலும் அந்தப் பந்தில் பவுல்டு ஆகியிருப்பேன்: விராட் கோலி

3-ம் நிலையில் இறங்கியிருந்தாலும் அந்தப் பந்தில் பவுல்டு ஆகியிருப்பேன்: விராட் கோலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures