அமைச்சர்களான காமினி ஜயவிக்ரம பெரேரா புதிய புத்தசாசன அமைச்சராகவும், தலதா அத்துகோரல புதிய நீதி அமைச்சராகவும் இன்று சற்று முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

