மூன்றாவது முறையாக மேயராக முயற்சி: கல்கேரி மேயர் அறிவிப்பு
கல்கேரி நகரத்தின் தற்போதைய மேயர், அடுத்த நகரசபை தேர்தலிலும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கல்கேரி நகர மேயர் நஹீத் நென்ஷி, கடந்த 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் முதலாவதாக மேயராகத் தெரிவானார். பின்னர் 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலிலும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள தேர்தலிலும் போட்டியவள்ளதாக அறிவித்த அவர், தனது பதவிக் காலத்தில் கல்கேரியில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கின் போது முறையான பல திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கல்கேரியில் வீதி அபிவிருத்திக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் போக்குவரத்து மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தான் தொடர்ந்து பதவியில் நீடித்தால் மேலும் சிறப்பான பணிகளை முன்னெடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.