Sunday, May 18, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாளொன்றுக்கு 40 சிகரெட்டுகள் பிடித்த 2 வயதுக் குழந்தையின் இன்றைய நிலை.

October 25, 2017
in News, World
0
நாளொன்றுக்கு 40 சிகரெட்டுகள் பிடித்த 2 வயதுக் குழந்தையின் இன்றைய நிலை.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தோனேசியாவைச் சேர்ந்த ஆர்டி ரிஸல் எனும் இந்த 2 வயதுச் சிறுவன் திடீரென ஊடகங்களில் பரபரப்புச் செய்தியானான். எதற்கென்று தெரியுமா? 2 வயது என்பதே குழந்தைப் பருவம் தான், அந்த அறியாக் குழந்தைப் பருவத்தில் இந்தச் சிறுவன் நாளொன்றுக்கு 40 சிகரெட் வரை தொடர்ந்து அசால்ட்டாக ஊதித் தள்ளிக் கொண்டிருந்தான். இந்த சிகரெட் கணக்குகள் கூட தோராயமாக அவனது பெற்றோர் சொன்ன அளவீடுகளே! அந்த அளவுக்கு சிகரெட் மீது அவனுக்கு அளவில்லாத மோகம் இருந்தது. சிகரெட் பழக்கம் மட்டுமல்ல ரிஸலுக்கு அளவில்லாமல் அபிரிமிதமாகச் சாப்பிடும் வழக்கமும் இருந்திருக்கிறது. இதனால் உடல்பருமனாலும் தொடர்ந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறான்.

பின்னர், ஊடகங்களில் வெளியான அவனது கதை பலரது கோபங்களைத் தூண்டியது, அந்தக் கோபம்… இந்தோனேசிய அரசை குழந்தை பருவப் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டியது. அதைத் தொடர்ந்து ரிஸலுக்கு புகைபிடிக்கும் பழக்கத்திற்காக சிகிச்சையும் அளிக்கப்பட்டது. புகைப்பழக்கத்துக்கு அடிமையாகும் போது ஆர்டிக்கு 2 வயது தான் ஆகியிருந்தது. புகை அடிமைப் பழக்கத்திலிருந்து அவனை மீட்டுக் கொண்டு வர மறுமலர்ச்சி நிலையத்துக்கு அனுப்பப்பட்டான். அங்கிருந்து தற்போது தனது புகை அடிமைத்தனத்திலிருந்து மீண்டிருக்கும் ஆர்டிக்கு இப்போது 8 வயதாகிறது. ஆனாலும் குழந்தைப் பருவத்திலிருந்து பழக்கமாகி விட்ட ஒரு அடிமைத்தனத்திலிருந்து மீள்வதென்பது அவனுக்கு அத்தனை எளிதான விஷயமாக இல்லை.

அப்படித்தான் புகைப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு முயற்சித்து கடைசியில் ஆர்டி, தொடர்ந்து இடைவிடாமல் உண்ணும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டான். இது எல்லோருடைய வாழ்க்கையிலுமே நிகழக்கூடிய ஒரு சோகம் தான். ஒரு அடிமைத்தனத்திலிருந்து விடுபட நினைத்து பிறிதொன்றில் மாட்டிக் கொள்வதை எப்படி மீட்சி என்று கருத முடியும். அதனால் ஆர்டியின் பெற்றோர் கவலையில் ஆழ்ந்தனர்.

ஆர்டியின் அம்மா டயானேவின் கூற்றுப்படி, இப்போது யாரேனும் ஆர்டியிடம் புகைப்பதற்கு சிகரெட்டுகள் வழங்கினார்கள் எனில், அவர்களிடம் ஆர்டி சொல்லும் பதில்; ஐ லவ் காக் செடொ (ஆர்டியின் மனநலவியல் மருத்துவர்களில் ஒருவர்) நான் புகைத்தால் அவர் மிகவும் மனம் வருந்துவார் என்பதோடு என்னை நானே சுகவீனனாகவும் ஆக்கிக் கொண்டவனாவேன்.’ அதனால் எனக்கு சிக்ரெட்டுகள் எப்போதுமே வேண்டவே வேண்டாம் என்கிறானாம். ஆர்டியைப் பொருத்தவரை இது மிக நல்ல முன்னேற்றம் தான்!

தற்போது தனது அளவில்லாமல் உண்ணும் பழக்கத்துக்காகவும் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வரும் ஆர்டி. கூடிய விரைவில் அந்த அடிமைத்தனத்திலிருந்தும் விடுபட்டு விடுவான் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ஆர்டியின் அம்மா!

அன்று ஒபிசிட்டியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆர்டியின் இன்றைய தோற்றம் இது தான்.

Previous Post

“நாட்டுக்குத் துரோகம் செய்யும் நபர்கள், சுட்டுக் கொலை செய்யப்பட வேண்டும்”

Next Post

மைத்திரிபால சிறிசேன, அவரது வாக்குறுதியை மீறியே ஆகவேண்டும் – அமைச்சர் ஜோன்

Next Post
Easy24News

மைத்திரிபால சிறிசேன, அவரது வாக்குறுதியை மீறியே ஆகவேண்டும் - அமைச்சர் ஜோன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு

May 18, 2025
கோத்தபாய போலவே அனுரவும் இனப்பிரச்சினை இல்லை என்று நடக்கின்றார் | கலாநிதி தயான் ஜயத்திலக்க

கோத்தபாய போலவே அனுரவும் இனப்பிரச்சினை இல்லை என்று நடக்கின்றார் | கலாநிதி தயான் ஜயத்திலக்க

May 18, 2025
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வு

May 18, 2025
தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது |  நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது |  நிமால் விநாயகமூர்த்தி

May 18, 2025

Recent News

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு

May 18, 2025
கோத்தபாய போலவே அனுரவும் இனப்பிரச்சினை இல்லை என்று நடக்கின்றார் | கலாநிதி தயான் ஜயத்திலக்க

கோத்தபாய போலவே அனுரவும் இனப்பிரச்சினை இல்லை என்று நடக்கின்றார் | கலாநிதி தயான் ஜயத்திலக்க

May 18, 2025
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வு

May 18, 2025
தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது |  நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது |  நிமால் விநாயகமூர்த்தி

May 18, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures