Friday, February 3, 2023
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

திசைமாறிப் பயணிக்கும் இனவாதம் – அழிக்கப் போகின்றார்களா? அடக்கப்போகின்றார்களா?

December 18, 2016
in News
0
திசைமாறிப் பயணிக்கும் இனவாதம் – அழிக்கப் போகின்றார்களா? அடக்கப்போகின்றார்களா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திசைமாறிப் பயணிக்கும் இனவாதம் – அழிக்கப் போகின்றார்களா? அடக்கப்போகின்றார்களா?

நல்லிணக்கம் ஒற்றையாட்சி என்று அரசு பாடுபட்டு கொண்டு வரும் வேளையில் நாளுக்கு நாள் இனவாதம் எனும் பிரச்சினை அதிகரித்து கொண்டே செல்கின்றதே தவிர குறைவடைய வில்லை.

பௌத்தம் அழிக்கப்படுகின்றது, அதனை காக்க வேண்டும் என புரப்பட்ட கும்பல்கள் தற்போது கடும்போக்கான இனவாதத்தினை தூண்டும் வகையிலான வாதங்களை மக்கள் மத்தியில் புகுத்திக் கொண்டு வருகின்றார்கள்.

இங்கு கடந்த காலத்தை மீட்டிப்பார்க்கும் எந்த ஒரு நபரும் இனவாதம் பற்றி பேசமாட்டார்கள் என்றாலும் கூட யாருக்கு என்ன நடந்தால் என்ன எனக்கு இலாபம் கிடைத்தால் போதும் என்ற வகையிலேயே இப்போது காய் நகர்த்தல்கள் தொடர்ந்து கொண்டு வருகின்றது.

ஆரம்பத்தில் பௌத்தம் காக்க வந்தவர்கள், கடும்போக்காக வாதங்களை பரப்பியவர்கள் இப்போது மீண்டும் புலிகள் வந்து விட்டார்கள் அதனால் இராணுவ பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என்று பல கதைகள் வெளியிட்டு வருகின்றனர்.

இதில் வேடிக்கை என்னவெனில் முதலில் இனவாதம் பரப்பி பௌத்தம் காக்க வந்தவர்கள் கடைசியில் நாட்டின் பிரச்சினைகளுக்கு காரணம் விடுதலைப் புலிகள் என்று புதுக்கதைகள் பரப்புகின்றார்கள்.

அதற்கடுத்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களே இந்தப்பிரச்சினைக்கு காரணம் என்றும் அவர்கள் மூலமாகவே நாடு இயக்கப்பட்டு வருகின்றது என்ற வாதத்தினை முன்வைக்கத் தொடங்கி விட்டனர்.

குறிப்பாக மட்டக்களப்பில் சுமனரதன தேரர் பௌத்தம் அழிந்து விட்டது, விடுதலைப்புலிகள் கொல்ல வருகின்றார்கள், எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்று கூறிவருவதோடு மட்டக்களப்பில் தனது விகாரை அழிக்கப்படப்போவதாக பிரச்சினைகளைக் எழுப்பிக்கொண்டு வருகின்றார்.

அவரின் இப்போதைய பிரச்சினையை சற்று பின்நோக்கி பார்க்கும் போது 30 வருடகாலம் ஆயுதபலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த விடுதலைப் புலிகள் மட்டக்களப்பில் நிலை கொண்டிருந்த போது கூட..,

அவ்வளவு ஏன் 1998ஆம் ஆண்டு தலதாமாளிகை மீதும் தாக்குதல் மேற்கொண்ட புலிகள் தனது காலத்தில் மட்டக்களப்பு விகாரை மீது தாக்குதல் நடத்தவில்லை.

அவர்கள் நினைத்திருந்தால் அப்போதே அதனை தரைமட்டமாக்கி விட்டிருக்கலாம் ஆனாலும் அப்படி எதனையும் செய்யவில்லை. இப்படியான ஓர் நிலையில் இப்போது எங்கிருந்து அந்த விகாரை அழிக்கப்படுவதாக கூறி பிரச்சினை எழுப்பப் படுகின்றது என்பது தெரியவில்லை.

ஆக மொத்தம் இது பிரச்சினையை ஏற்படுத்துவதற்காகவே எழுப்பப்பட்ட விடயம் என்பது தெளிவாகத் தெரியும். இது ஆட்சியாளர்களுக்கும் தெரிந்த விடயம் தான் என்றாலும் இதனை வளர விட்டு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது மட்டும் ஏன் என்று தெரிய வில்லை.

அது மட்டுமா ஆரம்பத்தில் தனியாக களம் இறங்கிய குறித்த பிக்கு இப்போது படையுடன் செயற்பட்டு வருகின்றார். அவருக்காக குரல் கொடுக்க ஓர் கூட்டத்தினையே உருவாக்கி விட்டார்.

அது மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கும் பௌத்தர்களுக்கும் அவர் தனது செய்திகளை பரப்பி வருவதோடு நிதி சேகரிப்புகளையும் மேற்கொண்டு வருகின்றார்.

போதாக்குறைக்கு தனது உயிருக்கு ஆபத்து உள்ளது எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அடிக்கடி கூறிக்கொண்டு வரும் இவரது திட்டம் எது வென்று தெரியவில்லை.

இப்போதைய நிலையில் வேண்டுமென்றே இவர் தலைமறைவாகி விட்டால் அந்த ஒரு பிரச்சினையே போதும் இலங்கையை ஆட்டிப்படைக்க என்பது தெரிந்த ஒன்று. அதன் காரணமாக இவர் அடிக்கடி இவ்வாறு சொல்லிக் கொண்டு வருகின்றாரா என்பதும் ஒரு வகை சந்தேகமே.

பௌத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் இலங்கை அரசு அதிரடியாக அவரை கைது செய்து விடாது. இப்போதைய நிலையில் சிங்களவர்கள் மத்தியில் ஓர் புரட்சி வீரராகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் இவர் ஓர் மத போதகரா? என்பது சிந்திக்கப்பட வேண்டியதே.

அதனையும் தாண்டி அவர் கைது செய்யப்பட்டு விட்டால் அதுவும் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்து விடும் அதனால் அரசு பொறுமை காத்து வருகின்றது என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

எவ்வாறாயினும் இவர்களுடைய புதுக்கதைகள், சகோதர இனத்தவரிடையே ஆழப் பதிய முன்னர் அரசு தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்திலேயே இருக்கின்றது.

ஆனாலும் தொடர்கதையாக மாறிவரும் இவர்களுடைய பிரச்சினைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்குமா? அல்லது இது தொடர்ந்து சென்று பயங்கரத்தில் முடிய வழிசமைக்குமா? என்பது காலத்தில் பதில் மட்டுமே.

Tags: Featured
Previous Post

உயர் இராணுவ அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு செய்த மாணவன்

Next Post

பிரித்தானியாவில் 19 மீற்றர் உயரத்திற்கு எழுந்த பேரலை! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Next Post
பிரித்தானியாவில் 19 மீற்றர் உயரத்திற்கு எழுந்த பேரலை! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பிரித்தானியாவில் 19 மீற்றர் உயரத்திற்கு எழுந்த பேரலை! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

August 26, 2022
கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

September 13, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Easy24News

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

ஆர்ச்சர் அபார பந்துவீச்சு, இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி | தென் ஆபிரிக்காவின் உலகக் கிண்ண நேரடி தகுதிக்கு தாமதம்

ஆர்ச்சர் அபார பந்துவீச்சு, இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி | தென் ஆபிரிக்காவின் உலகக் கிண்ண நேரடி தகுதிக்கு தாமதம்

February 2, 2023
அமெரிக்கா- தென் கொரியா கூட்டு வான்வழி போர்ப் பயிற்சி

அமெரிக்கா- தென் கொரியா கூட்டு வான்வழி போர்ப் பயிற்சி

February 2, 2023
அதானி குழும விவகாரம் | நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்த எதிர்கட்சிகள் கோரிக்கை

அதானி குழும விவகாரம் | நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்த எதிர்கட்சிகள் கோரிக்கை

February 2, 2023
பாலியல் வன்முறை குறித்து செய்தி சேகரிக்க சென்றவேளை கைதுசெய்யப்பட்ட பத்திரிகையாளர் இரண்டு வருடங்களின் பின்னர் விடுதலை

பாலியல் வன்முறை குறித்து செய்தி சேகரிக்க சென்றவேளை கைதுசெய்யப்பட்ட பத்திரிகையாளர் இரண்டு வருடங்களின் பின்னர் விடுதலை

February 2, 2023

Recent News

ஆர்ச்சர் அபார பந்துவீச்சு, இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி | தென் ஆபிரிக்காவின் உலகக் கிண்ண நேரடி தகுதிக்கு தாமதம்

ஆர்ச்சர் அபார பந்துவீச்சு, இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி | தென் ஆபிரிக்காவின் உலகக் கிண்ண நேரடி தகுதிக்கு தாமதம்

February 2, 2023
அமெரிக்கா- தென் கொரியா கூட்டு வான்வழி போர்ப் பயிற்சி

அமெரிக்கா- தென் கொரியா கூட்டு வான்வழி போர்ப் பயிற்சி

February 2, 2023
அதானி குழும விவகாரம் | நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்த எதிர்கட்சிகள் கோரிக்கை

அதானி குழும விவகாரம் | நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்த எதிர்கட்சிகள் கோரிக்கை

February 2, 2023
பாலியல் வன்முறை குறித்து செய்தி சேகரிக்க சென்றவேளை கைதுசெய்யப்பட்ட பத்திரிகையாளர் இரண்டு வருடங்களின் பின்னர் விடுதலை

பாலியல் வன்முறை குறித்து செய்தி சேகரிக்க சென்றவேளை கைதுசெய்யப்பட்ட பத்திரிகையாளர் இரண்டு வருடங்களின் பின்னர் விடுதலை

February 2, 2023
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures