தனுஷ் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு – மௌனம் கலைப்பாரா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ்.
இவர் தன்னுடைய மகன் என்று மேலூர் அருகே மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி உரிமை கொண்டாடி வருகின்றனர்.
அவர் பெயர் கலைச்செல்வன் என்றும், திருப்பத்தூரில் 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது நடிக்கும் ஆசையில் சென்னை வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
நடிகர் தனுஷிடம் இருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தருமாறு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கதிரேசன் மீனாட்சி தம்பதி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், 2017ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர் தனுஷுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீண்ட காலமாக கூறப்பட்டு வரும் இந்த பிரச்சனை குறித்து தனுஷ் மௌனம் கலைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.