சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவிருந்த படம் ட்ராப் ஆனது- உண்மையை உடைத்த இயக்குனர்
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன். இவர்கள் இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தால் எப்படியிருக்கும்? என்பது தான் பலரின் எதிர்ப்பார்ப்பு.
அப்படி ஒரு விஷயம் நடப்பதாக இருந்ததாம். ஆம், இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இந்த வாரம் மாவீரன் கிட்டு படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் சிறப்பு பேட்டியாக சினி உலகம் நேயர்களுக்காக சுசீந்திரன் பல தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
இதில் இவர் பேசுகையில் ‘பாண்டியநாடு படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்தது. இதில் விக்ராந்த் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார்.
ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த படம் ட்ராப் ஆகி விஷால் நடித்தார்’ என கூறினார். இதோ முழுப்பேட்டியையும் பார்க்க….