Monday, January 30, 2023
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையை பிரித்து விட்ட உலக நாடுகள்..! நெருங்கி விட்டது பேராபத்து..!!

December 17, 2016
in News
0
இலங்கையை பிரித்து விட்ட உலக நாடுகள்..! நெருங்கி விட்டது பேராபத்து..!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையை பிரித்து விட்ட உலக நாடுகள்..! நெருங்கி விட்டது பேராபத்து..!!

இப்போதைய ஆட்சி தொடர்ந்து செல்லுமானால் நாட்டிற்கு பேராபத்து ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இன்று கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ச நாட்டிற்கு வளங்களைச் சேர்த்தார், ஆனால் இப்போதைய ஆட்சி உள்ள வளங்களை வெளிநாடுகளுக்கு விற்று கொண்டு இருப்பதோடு அனைத்தையும் தனியார் மயப்படுத்தி வருகின்றது.

திருகோணமலை எண்ணெய் தாங்கி அமெரிக்காவிற்கு கொடுக்கப்பட்டு விட்டது. அதே போன்று யாழ், பலாலி, சம்பூர் போன்றவை இந்தியாவிற்கு கொடுக்கப்பட்டு விட்டது. இவ்வாறாக இலங்கையில் வளங்கள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு வருகின்றது.

மேலும் இப்போதைக்கு இராணுவமும் ஆட்சிக்கு எதிராக எழும் பொதுமக்களை அடக்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அண்மைக்காலமாக இதனை பார்த்துக் கொண்டுதான் வருகின்றோம். ஒரு மிருகத்திற்கு சமமானோரே கடற்படைத் தளபதியாக இருக்கின்றார்.

இப்படியே தொடருமானால் , இதே ஆட்சி தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமானால் இலங்கையின் அனைத்து சொத்துகளும் வெளிநாடுகளுக்கு சென்று விடும். அதனை தவிர்க்க முடியாது. இது இலங்கைக்கு அதி பயங்கரமான ஆபத்தாகும்.

மேலும், இந்த ஆட்சி எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை தொடர்ந்து கொண்டு செல்லுமாயின் பொலிஸ் சேவை, சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள் தவிர ஏனைய அனைத்தும் தனியார் மயப்படுத்தப்பட்டு விடும் என்ற பயங்கர எச்சரிக்கையினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக நந்தாமாலினி போன்றோரின் பழைய பாடல்களை உதாரணமாக கொண்டு அதற்கு ஏற்ற வகையில் தேசிய கீதத்தையும் மாற்றியமைத்து கொள்ளுங்கள்.

இதேவேளை இப்போது இந்த நாட்டிற்கு நாம் தெரிவிப்பது என்னவெனில், விடுதலைப்புலிகளிடம் முல்லைத்தீவையும் கிளிநொச்சியையும் கைப்பற்றியது போல இப்போது நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார அபாயத்தையும் அரசிடம் இருந்து மீட்கவேண்டும்.

எனவே அதற்காக அனைவருமாக ஒன்றிணைந்து முறைகேடான ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் எனவும் டலஸ் அழகப்பெரும தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மதிப்பீடு செய்யப்பட்ட பெறுமதி 2.5 பில்லியன் டொலர்கள் எனவும் அதனை 1.1 பில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்ய போகின்றனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

விலைமனு கோராமலேயே சீன நிறுவனத்திற்கு துறைமுகம் வழங்கப்படுகிறது.

இது நல்லாட்சியின் அடிப்படை நிபந்தனைகளுக்கு எதிரானது.

துறைமுகம் மற்றும் விமான நிலையத்தின் பாதுகாப்புக்கு படையினரை ஈடுபடுத்த போவதாக பிரதமர் நேற்று கூறியுள்ளார்.

விமான நிலையம் மற்றும் துறைமுகத்தின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை.

கொள்ளை விலைக்கு விற்பனை செய்யும் போது ஏற்படும் எதிர்ப்பை அடக்கவே படையினரை அவற்றின் பாதுகாப்புக்கு பயன்படுத்த போகின்றனர்.

இதனடிப்படையில் நாட்டின் தற்போதைய தேசிய கீதத்திற்கு பதிலாக நந்தா மாலினியின் ரட்ட கரவன்ன நம் என்ற பாடசாலை தேசிய கீதமாக பயன்படுத்த முடியும்.

இலங்கை மத்திய வங்கியும் திறைசேரியும் மீட்கப்படாத பிரதேசங்களாக இருக்கின்றன. அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டளஸ் அழகப் பெரும குறிப்பிட்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

கோஹ்லி செய்த மிகப் பெரிய தவறு: கைமேல் பலனடைந்த இங்கிலாந்து அணி!

Next Post

முல்லைத்தீவில் முற்றுகையிட்டுள்ள இராணுவத்தினர்! – அச்சத்தின் மத்தியில் பெண்கள்

Next Post
Easy24News

முல்லைத்தீவில் முற்றுகையிட்டுள்ள இராணுவத்தினர்! - அச்சத்தின் மத்தியில் பெண்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

August 26, 2022
கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

September 13, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Easy24News

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேலன் சுவாமிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேலன் சுவாமிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

January 30, 2023
18 வயதை பூர்த்தியடைந்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

பெப்ரவரி 20 ஆம் திகதி தபால் மூல வாக்கெடுப்பு ஆரம்பம்

January 30, 2023
ஒரு சிக்ஸர் கூட அடிக்காத போட்டியாக இந்திய- நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி!

ஒரு சிக்ஸர் கூட அடிக்காத போட்டியாக இந்திய- நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி!

January 30, 2023
குடியரசு தினத்தில் ‘மேட் இன் இந்தியா’ ஆயுதங்கள்

குடியரசு தினத்தில் ‘மேட் இன் இந்தியா’ ஆயுதங்கள்

January 30, 2023

Recent News

பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேலன் சுவாமிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேலன் சுவாமிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

January 30, 2023
18 வயதை பூர்த்தியடைந்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

பெப்ரவரி 20 ஆம் திகதி தபால் மூல வாக்கெடுப்பு ஆரம்பம்

January 30, 2023
ஒரு சிக்ஸர் கூட அடிக்காத போட்டியாக இந்திய- நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி!

ஒரு சிக்ஸர் கூட அடிக்காத போட்டியாக இந்திய- நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி!

January 30, 2023
குடியரசு தினத்தில் ‘மேட் இன் இந்தியா’ ஆயுதங்கள்

குடியரசு தினத்தில் ‘மேட் இன் இந்தியா’ ஆயுதங்கள்

January 30, 2023
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures